திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதேவேளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முன்னர் நீதி மன்றத்துக்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸநாயகத்தை விடுவிக்கக்கோரி உயர்நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment