30 August 2009

இனவாத அரசியல் செய்ய முடியாது – ஜனாதிபதி

நாட்டில் எவரும் இனி மேல் இனவாத அரசியல் செய்ய முடியாது. இனவாத அரசியல் என்பது நாட்டிற்கு உகந்தது அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய காங்கிரசின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் தமிழர்கள், நாங்கள் இனிமேல் இனவாத அரசியல் செய்ய முடியாது. இதனைத் தவிர்த்து நாட்டை முன்னேற்றக் கூடிய தீர்மானங்களைச் சிந்தித்து மேற் கொள்ள வேண்டும் .நாட்டில் சிறுபான்மையினர் என எவரும் இனி மேல் இல்லை. இந்த தேசத்தின் மீது அக்கறை காட்டும் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் தான். என்னைப் பொறுத்த வரை நான் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என நேசிப்பது தாய் நாட்டைத் தான்.அது போல் சகலரும் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். புத்தியுடன் செயல்பட வேண்டும். குறுகிய எண்ணம் இருக்கக் கூடாது என்றார்.

No comments:

Post a Comment