30 August 2009

இலங்கைத் தமிழர்களுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் - தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்குரிய ஏற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசாங்கத்தை கோரியுள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. இலங்கைத் தமிழர்களில் அநேகமானோர் கஷ்டங்களை எதிர்நோக்குவதுடன், மழையுடன் போராட வேண்டியும் உள்ளது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் மேலும் கவனத்தைச் செலுத்துமாறு மத்திய அரசைக் கோருகிறோம் என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment