01 September 2009

18 கிராமங்களில் மீள்குடியேற்றம்

வவுனியா பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 18கிராமங்களில் (ஓமந்தை, அரசமுறிப்புக்குளம், வேப்பங்குளம், நொச்சிமோட்டை, பறநாட்டகல், இளமருதங்குளம், மருதங்குளம், கற்பகபுரம்) மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பிரதேச செயலாளர் ஏ.சிவபாதசுந்தரன் தெரிவித்துள்ளார்.

இக் கிராம மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று தமது காணிகளைத் துப்பரவு செய்வதிலும் தற்காலிக கொட்டில்கள் அமைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். பாடசாலைகள், வீதிகள், குளங்கள் என்பவற்றைப் புனரமைக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாகவும் வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். மீளக்குடியமரும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு வசதியாக இந்தப் பகுதிகளில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகள் நிறுவப்பட்டு வருவதாகவும், தற்காலிகக் கொட்டில்களை அமைப்போருக்குத் தேவையான கூரைத் தகடுகள் வழங்கப்பட்டு வருவதுடன், சொந்த இடங்களுக்குச் சென்றவுடன் மீள்குடியமர்ந்த மக்களுக்கு 25,000ரூபா நிதி வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment