01 September 2009

நிலையான அரசியல் தீர்வின் மூலம் தேசிய ஒற்றுமையும் சமத்துவமும் - டியூ குணசேகர

வவுனியா கம்யூனிஸ்ட் பிரமுகர் கே. பத்மநாதனின் நினைவு தினக் கூட்டம் 16.08.2009 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற போது அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகர ஆற்றிய உரை.

தோழர் பத்மநாதனுக்கு மரியாதை செலுத்தவும் அவரைக் கௌர விக்கவும் அவருக்கு நன்றி தெரி விக்கவுமாக முதலாவது நினைவுச் சொற் பொழிவை ஆற்றும் பணி எனக்கு ஒப்படை க்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் எனக்கு விடுத்த அன்பான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.தோழர் பத்மநாதன் 2005, ஜுலை 13ம் திகதி காலமானார். வன்னியில் அப்போது நிலவிய நிலைமை காரணமாக, எம்மைப் பிரிந்து சென்ற தலைவருக்கு உரிய மரியாதையுடனும் கௌரவத்துடனும் நன்றியறிதலுடனும் அப்போது எம்மால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. அவரது குடும்பத்தினர் இந்த நினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற காரணத்தினால் நான்காவது சிரார்த்த தினமான ஜுலை 13ம் திகதி இதனை நடத்துவதற்கு அவர்கள் விரும்பவில்லை. அவரது நான்காவது சிரார்த்த தினமும் அவரது கட்சியின் 66 வது ஆண்டு விழாவும் ஒரே சமயத்தில் வருவதால் நான் அவர்களுடன் இதற்குச் சம்மதித்தேன்.
முழுமை http://www.sooddram.com/pressRelease/Sep2009/Sep012009_CCP.htm

No comments:

Post a Comment