02 September 2009

யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, பிரதி முதல்வர் இளங்கோ

யாழ். மாநகர சபை முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவும், பிரதி முதல்வராக என். இளங்கோவையும் நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும், இவர்களின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர்களுக்கான பெயர்களை ஈ.பி.டி.பி சிபாரிசு செய்திருந்ததாகவும், அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பிரதி முதல்வர் பதவி தங்களுக்கு வழங்க வேண்டுமென்று கோரியிருந்த போதிலும் ஈ.பி.டி.பி இற்கும் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் இற்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையையின் போது யாழ். குடாவில் குறைந்தள முஸ்லிம்களே வசிக்கின்றனர். யாழ். தேர்தலில் புத்தளம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்தே அதிகமான முஸ்லிம்கள் வாக்களித்தனர். எதிர்வரும் காலங்களில் பெருமளவு முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்பட்ட பின் பிரதி முதல்வர் பதவியை வழங்குவது தொடர்பாக உடன்பாடு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment