23 October 2009

ஒரு லட்சம் இடம்பெயர் மக்களை மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை

ஒரு மாத காலத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு லட்சம் பேரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் ரோஹண குமார திசாநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 பேரை மீள்குடியமர்த்தும் நடவடிக்கையில் கலந்து கொண்டு பேசும் போது தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 42,000 பேரை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கான ஆரம்ப வைபவங்கள் வியாழனன்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றன.

இந்த வைபவங்களில் 4950பேர் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக மனிக்பாம் முகாம்களில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment