தபால்மூல வாக்களிப்பு : 4,50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 4,50,000 க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னொரு போதும் இல்லாத வகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தொகையான தபால் மூல வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
விண்ணப்பித்தவர்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியானர்கள் தெரிவு செய்யப்பட உள்ளதாகவும், ஏனையோரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள் ஆற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மட்டும் தபால் மூல வாக்களிப்புக்குத் தகுதி பெறுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருணாகல் மாவட்டத்தில் பெருந்தொகையானோர் இதற்கென விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment