28 December 2009

நாடுகடத்தப்பட்ட சிவாஜிலிங்கம் நாடு திரும்பினார்

இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாடு திரும்பினார் .கடந்த ஒரு வார காலம் லண்டனில் தங்கியிருந்த அவர் டுபாய் ஊடாக இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் டுபாய்க்கு திருப்பியனுப்பப்பட்டார். டுபாயிலிருந்து இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்தடைந்துள்ளார்.

No comments:

Post a Comment