17 August 2014

பழமை வாய்ந்த கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் இடித்து தரை மட்டம்

400 வருடம் பழமை வாய்ந்த திருமலை வெள் ளை மணல் கருமலையூற்று பள்ளி வாசல்  இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கி  தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வா கத்தின் தலைவர் தெரிவித்துள் ளார்.
 
அவர் இதுபற்றி விபரிக்கையில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்தி தற்பொழுது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் பள்ளிவாசல் கனரக இயந்திரத்தை பயன்படுத்தி உடைத்து முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி இருந்த இடமே தெரியவில்லை. நாங்கள் பள்ளிவாசலை பார்வை யிடுவதற்காக அனுமதி கேட்டபோதும் அதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதிக்க வில்லை
 
2007 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிவாசல் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ள்ளதன் காரணமாக அங்கு குடியிருந்த 350 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்கள் வீடு வாசல்களை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
 
400 வருடங்களுக்கு மேல் அங்கு குடியிருந்து மீன்பிடித் தொழிலை செய்து வந்த எம்மை 2009 ஆம் ஆண்டு முதல் செல்ல விடாது படையினர் தடுத்துள்ளமையால் 350 குடும்பங்கள் தமது மீன்பிடித் தொழிலையும் குடியிருப்புக்களையும் இழந்துள்ளனர்.
 
கருமலையூற்று ஜும்மா பள்ளிவாசல் 1885 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மீண்டும் அது 1985 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. அதுவுமின்றி தற்போதைய கிழக்கு மாகாண முதல் அமைச்சர் 2007 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த வேளையில் மீலாநபி நிதியத்திலிருந்து 5 லட்சத்து 80 ஆயிரத்தை ஒதுக்கியதன் பேரில் மீண்டும் அது புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
 
2009 ஆம் ஆண்டு முதல் கருமலையூற்றுப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் மற்றும் ஏனைய இடங்கள் கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கின்றன. நேற்றைய தினம் கனரக இயந்திரமொன்றின் சத்தம் பள்ளிவாசலை அண்டிய பகுதியில் கேட்ட போது என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய மக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் படையினர் அனுமதிக்கவில்லை. கடல் பிரதேசத்தை அண்டிய பகுதி ஆகையால் தோணியொன்றை எடுத்து கடல்வழியாக சென்று பார்த்த போது பள்ளிவாசல் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி தரைமட்டமாக்கப்படுவதைக் கண்டோம்.
 
இந்த நாசகார செயல் பற்றி கிழக்கின் முதல் அமைச்சருடனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கினுடனும் தொடர்பு கொண்டு தெரிவித்தமைக்கமைய முதல் அமைச்சர் நஜீப் இராணுவத் தளபதியோடு தொடர்பு கொண்டு உரையாடினார். இராணுவத் தளபதி அப்படியொரு பள்ளி இருக்கவில்லையென தெரிவித்ததாக தன்னிடம் கூறியதாக முதலமைச்சர் எம்மிடம் தெரிவித்தார் என பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார்.

 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இராணுவத்தினர் கருமலையூற்றுப் பகுதியில் இப்பள்ளிக்கு அருகில் இராணுவ முகாமொன்றை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நஜீப் அமைச்சராக இருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டு நிதியொதுக்கி மேற்படி பள்ளிவாசலை புனரமைத்துள்ளனர்.
 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மொஹமட் மஹ்ரூப் இம்ரான் தெரிவிக்கையில் 1926ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1947ம் ஆண்டு ஜும்மா பள்ளி வாசலாக பதிவு செய்யப் பட்டு, அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளமிடப்படும் வரை இஸ்லாமியர்களின் வழமையான தொழுகைகளும் அங்கு இடம்பெற்று வந்தன என்றார்

No comments:

Post a Comment