இலங்கை மனித உரிமை
விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐ. நா மனித
உரிமைகள் பேரவை குறித்த விசாரணை செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில்
புதிய ஏற்பாடுகளை விசாரணை கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளவுள்ளது.
விசாரணை
செயற்பாடுகளை வலுப்படுத்துவதன் ஒரு கட்டமாக, விசாரணைகளுக்கு
வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்ட
ஏற்பாடுகளை தமது திட்டத்தில் மனித உரிமைப் பேரவை
இணைத்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது
விசாரணைக்குழு, தமது ஆதாரங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக
“நம்பிக்கைக்குரிய நியாயமான தளம்” என்ற ஐக்கிய நாடுகளின் சட்ட
அம்சத்தையும் தமது விசாரணை த் திட்டத்தில் இணைக்கவுள்ளது. விசாரணை
செயற்பாடுகளின் தரத்தை உறுதிபடுத்துவதற்காகவே இந்த செயற்பாடு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது விசாரணை
செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையானது
நம்பிக்கைகைக்குரிய தகவல் மூலத்தை பெறுவதை உறுதிபடுத்துவதாக
இந்த புதிய ஏற்பாடுகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சர்வதேச
மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள்
மீறப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற விசாரணையை கோரும் சாத்தியங்கள்
உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டவாக்க
இணைப்பின்படி இலங்கையை தவிர்ந்த ஏனைய அரசாங்கங்கள், தமது
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள்
விசாரணைக்குழு எதிர்பார்க்கிறது.
இதற்காக 1948ஆம்
ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
அலுவலக அதிகாரிகள் கொண்டுள்ள ராஜதந்திர அந்தஸ்தை
பயன்படுத்திக்கொள்ள விசாரணைக்குழு எதிர்ப்பார்ப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய
நாடுகளின் விசாரணை குழுவானது விசாரணை முடிவில் இறுதி முடிவை
வெளியிடாது என்றும் மதிப்பீட்டையே வெளியிடும் என்றும் அவை எதிர்கால
குற்றவியல் விசாரணைக்கு வழிகோலும் என்றும் தெரிவிக்கபடுகின்றது.
இதேவேளை ஐக்கிய
நாடுகள் மனித உரிமை விசாரணைக் குழு நேர்காணல் செய்யும் சாட்சிகளின்
நாடுகளின் அரசாங்கங்கள் விசாரணைக் குழுவுடனக் ஒத்துழைப்புடன்
செயற்பட அழைக்கப்படும் என்று விசாரணை செயற்பாட்டின் புதிய
ஏற்பாடுகள் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் விசாரணை செயற்பாட்டுக்கு
ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்றும் விசாரணையாளர்கள் இலங்கை
வருவதற்கு விசா வழங்கப்படமாட்டாது என்றும் இலங்கை திட்டவட்டமாக
அறிவித்துள்ளது.
கடந்த வாரம் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை
விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளித்த அரசாங்கம் பான் கீ மூன் கோரிக்கை
விடுத்தாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று
கூறியிருந்தது.
No comments:
Post a Comment