02 November 2015

முஸ்லிம்கள் வெளியேற் றப்பட்டது இனசுத்திகரிப்பு இல்லை: அது இனபாதுகாப்பே

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமை க்கு தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியத் தேவையில்லை. முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப் பில்லை. இது இன பாதுகாப்பே என   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.  அரியநேத்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனசுத்திகரிப்பு எனவும் கூறிய கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அரியநே;திரன் இதனைத் தெரிவித்தார்.

 பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்தானது அவரின் சொந்தகருத்தே தவிர அது தமிழ்த் தேசியகூட்டமைப்பின் கருத்தல்ல. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அவரின் கருத்தை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் பலர் ஏற்காமலும் விடலாம்.

யாழ். முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்யவில்லை. இன பாதுகாப்புக் காகவே  அவர்கள் பாதுகாப்பாக எந்த தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட் டார்கள்.
 
யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வெளியேற்றப்படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
 
 நன்றி- வீரகேசரி
 

No comments:

Post a Comment