வடபகுதி தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அம்மக்களின் நல்வாழ்விற்கு செயல்பட வேண்டிய பாரிய பொறுப்பு புதிய ஆளுநராக பதவியேற்றுள்ள தங்களுக்குள்ளது.
தாங்கள் சிறந்த சேவைகளை பெற்றுக்கொடுத்து வடக்கு, தெற்கு மக்களின் நல்லுறவிற்கும் ஐக்கியத்திற்கும் பாலமாக திகழ வேண்டும். தங்களுக்கு மும் மணிகளின் ஆசிகளும் கிட்டவாழ்த்துகிறோம் என கண்டி மல்வத்த பெளத்த பீட மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள, அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயகதேரர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி ஆகியோர் கூறி ஆசீர்வதித்துள்ளனர்.
வடமாகாணத்திற்கு ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதவியேற்றுக் கொண்ட பின்னர் நேற்றுக் காலை கண்டிக்கு விஜயம் செய்ததுடன் தலதா மாளிகைக்குச் சென்று வழிப்பட்டார்.
பின்னர் அவர் மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகளான மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே மகாநாயக்க தேரர்கள் மேற்கண்டவாறு தெரிவித்து ஆசீர்வதித்துள்ளனர்.
No comments:
Post a Comment