23 February 2016

இந்திய வம்சாவளியினர் இந்நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையில் தனி தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமனி நுவரெலியாவில் இடம்பெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்த ஆணைக்குழு அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இலங்கை பாராளுமன்றம் இரண்டு சபைகளை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவது சபையில் அந்தந்த சமூகங்கள் சம்பந்தமான விடயங்கள் வரும் பொழுது அந்தந்த சமூக அங்கத்தினர்களின் அனுமதியுனேயே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

பிரஜாவுரிமை சட்டத்தில் இவ்வாறு இருந்திருக்குமானால் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்திருக்க முடியாது எங்களுக்கென்று ஒரு மாகாணம் அல்லது மாநில அலகு அவசியமாகின்றது. 

இந்த முறைமை பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் இடத்தில் மாத்திரமல்லாமல் வவுனியா அல்லது சிலாபம் அக்குரஸ்ஸ, தெனியாய போன்ற ஏனைய பகுதிகளையும் உள்­ளடக்கியதாக அமைய வேண்டும். மலையக மக்கள் எங்கெங்கு வாழ்ந்தாலும் அவர்களும் அந்த மாநில அமைப்பில் பங்குகொள்ளக் கூடியதாக ஒரு சபையை உருவாக்க வேண்டும். இலங்கை ஒரு மத சார்பற்ற நாடாகவும் பல இனங்கள், பல கலாசாரங்கள், பல சமயங்கள், பல மொழிகள் பேசுகின்ற மக்களை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டும். தமிழிலே இலங்கை குடியரசு நாடு என்று குறிப்பிட வேண்டும் என்றார்.

இலங்கையில் வாழும் மக்களாக சிங்களவர்கள், இலங்கைத்தமிழர்கள், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலேயர்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களையும் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். மலையக மக்களை குறிக்கும் இந்திய தமிழர் என்ற பதம் மாற்றப்பட வேண்டும். 

ஏனைய தேசிய இன மக்களோடு சமமாக மலையக மக்கள் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேர்தல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் 

கடந்த காலம் தொடக்கம் இன்றுவரை இந்திய வம்சாவளி சமூகம் பின்தங்கிய சமூகமாக வாழ்ந்து வருவதால் இவர்களுக்கென விசேட ஏற்பாடு கொண்டுவரப்படல் வேண்டும் நீதி, நிர்வாக சம்பந்தமான பதவிகளுக்கு ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவதை போல மலையக மக்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்றார். 

இந்திய அரசிலமைப்பு அரசியல் சட்;டத்தில்; 25,26,30,40 ஆகிய சரத்துக்களில் குறிப்பிடப்பட்டிருப்பது போல் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள், இலங்கை அரசியல் யாப்பு சட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார் புத்திரசிகாமணி

No comments:

Post a Comment