08 February 2016

ஜூனில் உள்­ளூ­ராட்சித் தேர்தல்

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்­கான எல்லை மீள் நிர்­ணய பணிகள் நிறை­வ­டை­ய­வுள்­ளன. இது குறித்­தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கைய­ளிக்­கப்­பட உள்­ளது. இதன்­படி ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­வித்தார்.
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல் பிற்­போ­டப்­ப­ட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­வ­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என  குறிப்­பிட்­டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்­தபா ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில்  உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை நிர்­ணயம் தொடர்­பி­லான முறைப்­பாட்டு விசா­ர­ணைகள் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாத­ம­ளவில் கைய­ளிக்­கப்­பட உள்­ளன. இதற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­யுள்­ளன. எனவே, அறிக்கை கிடைக்­க­ப்பெற்­ற­வு டன் தேர்­தலை நடத்­து­வ­தற்கு நாம் தயா­ரா­கவே உள்ளோம். இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் பிற்­போ­டப்­பட்­டமை தொடர்பில் அமைச்சு மீதான குற்­றச்­சாட்டை என்னால் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

2012 ஆம் 22ஆம் இலக்க உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் முறைமை திருத்த சட்­ட­மூ­லத்தில் பல தரப்­பினர் எதிர்ப்­பினை வெளியிட்­டனர். இதன்­பி­ர­காரம் எல்லை நிர்­ணய பணிகள் மீளவும் ஆரம்­பித்து, இதற்­கான விசேட குழு­வொன்றும் நிறு­வப்­பட்­டது.

இதன்­படி ஜூன் மாதம் நடத்­தப்­படும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல 70 சதவீதம் தொகுதி முறைமையும், 30 சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல்?
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை இவ்­வ­ரு டம் இறு­தி­வ­ரையில் பிற்­போ­ட­வுள்­ள­தாக அர­சாங்க தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை எதிர்­வரும் ஜூன் மாத­ம­ளவில் நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னிக்­க­ப்பட்­டி­ருந்­த­து. எனினும் தற்­போ­துள்ள நிலையில், இவ் வ­ருடம் இறு­தி­வரையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான வாய்ப்­பில்லை என தெரிய வரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­ யி­லான அர­சாங்க ஆட்­சி­யின் போது வரை­ய­றுக்­கப்­பட்ட எல்லை நிர்­ண­யத்தில் பல குறை­பா­டுகள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. எனவே, எல்லை நிர்­ணயம் தொடர்பில் கிடைக்­கப்­பெற்­றுள்ள முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்து அதனை தீர்ப்­ப­தற்கு இன்னும் கால அவ­காசம் தேவை­யா­க­வுள்­ளது. ஆகை­யி­னாலே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இவ்­வ­ருடம் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­பில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, மாந­கர சபைகள் உட்­பட 23 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஜூன் மாதம் வரையில் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன், பதவிக் காலம் முடி­வ­டைந்­துள்ள 312 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வாகம் விசேட ஆணை­யா­ளரின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

மேலும், உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாது காலம் தாழ்த்­து­வது தொடர்பில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சிகள் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தயா­ரா­கி­வ­ரு­கின்­றன. அத்­துடன், பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்ற பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே குறிப்பிட்டபோதிலும் தேர்தலை நடத்தாது பிற்போடப்பட்டு வருவது தொடர்பில் பல்வேறு தரப்புகள் விமர்சனங்களை முன்வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment