29 March 2016

எகிப்து விமானக் கடத்தல் - கடத்தப்பட்ட விமானத்திலிருந்த பயணிகள் சிலர் விடுதலை

கடத்தப்பட்ட எகிப்து விமானத்தில் விமானப் பணியாளர்களும் 4 வெளிநாட்டவர்கள் மாத்திரமே உள்ளதாக எகிப்திய விமான சேவை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
எகிப்தின் அலெக்ஸ்ஸான்றியாவில் இருந்து கெய்ரோவிற்குவு பயணித்த விமானம் கடத்தப்பட்டுள்ளதோடு பலவந்தமாக சைப்ரசின் Larnaca விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் Larnaca விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டபோது ஏனைய பயணிகள் விமானத்திலிருந்து இறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கடத்தப்பட்ட விமானத்தில் 55 பயணிகளும் 7 விமான பணியாளர்களும் பயணித்தாக தகவல்கள் வெளிவந்திருந்தன.
இவர்களுள் 8 பிரித்தானியர்கள் 10 அமெரிக்கர்கள் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும் தற்போது 4 வெளிநாட்டவர்களுடன் விமானப் பணியாளர்கள் மாத்திரமே குறித்த விமானத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகிப்து விமானக் கடத்தல்
எகிப்தில் பயணிகள் விமானம் (MS181) கடத்தப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை என சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாஸியட்ஸ் தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானம் 80 பேருடன் நடுவானில் கடத்தப்பட்டது.
விமானத்தில் இருந்த ஒருவர் வெடிகுண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றை அணிந்திருப்பதாகக் கூறியதை அடுத்து, விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் இறக்கப்பட்டது.
அதிலிருந்த பெண்கள், குழந்தைகள் பலர் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்.
தன்னிடமிருந்து பிரிந்து சென்ற சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த தனது மனைவியை சந்திக்க வேண்டும் எனவும் சைப்ரஸில் தனக்கு தஞ்சம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து இப்ராஹிம் சமஹா என்பவர் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாக சைப்ரஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இப்ராஹிம் சமஹாவின் மனைவி விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இதனையடுத்து, இந்த விமானக் கடத்தல் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கை அல்லவென சைப்ரஸின் அதிபர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
நன்றி- நியூஸ் பெஸ்ட்

No comments:

Post a Comment