20 May 2016

ரோணு' சூறா­வளி - அடைமழை -கடும் காற்று தொடரும்

வங்­காள விரி­கு­டாவில் நிலை­கொண்­டி­ருந்த தாழ­முக்க நிலைமை சூறா­வ­ளி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது. ' ரோணு' என இந்த சூறா­வ­ளிக்கு பெயரி­டப்­பட்­டுள்ள நிலையில் இந்த சூறா­வ­ளி­யா­னது காங்­கே­சன்­து­றையில் இருந்து வடக்கு நோக்கி 600 கிலோ­மீற்றர் தூரத்தில் மையம் கொண்­டுள்­ள­தாக காலநிலை அவ­தான நிலையம் தெரி­வித்­தது.
இதன் கார­ண­மாக இலங்­கையின் தென் மேற்குப் பகு­தியில் பலத்த காற்­றுடன் கூடிய அடைமழை பெய்யும் என காலநிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கி­றது. இந்த அடைமழை­யா­னது
அடுத்து வரும் சில நாட்­க­ளுக்கு நீடிக்கும்
எனவும் தாழ­முக்கப் பகு­தி­யை­நோக்­கி­காற்று இழுக்­கப்­ப­டு­வதன் விழை­வா­கவே இவ்­வாறு அடை மழை பெய்யும் நிலைமை உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் கால நிலை அவ­தான நிலையம் குறிப்­பிட்­டது.
அத்­துடன் இலங்­கையின் தென் மேற்கு பகு­தியில் பெய்யும் மழை­யா­னது குறிப்­பாக 100 மில்லி மீற்­றர்கள் முதல் 150 மில்லி மீற்­றர்கள் வரை இருக்கும் என அந்த நிலையம் குறிப்­பி­டு­கி­றது.
எவ்­வா­றா­யினும் இலங்­கையின் வட­மேற்கு,மேற்கு,மத்­திய மற்றும் சப்­ர­க­மு­வ­மா­கா­ணங்­க­ளிலும், காலி,மாத்­த­றை­மா­வட்­டங்­க­ளிலும் மழை­யோ­அல்­லது இடி­யு­ட­கூ­டிய மழையோ அவ்­வப்­போது பெய்யும் அறி­குறி உள்­ளது.
அநு­ரா­த­புரம் மற்றும் அம்­பாந்­தோட்­டை­மா­வட்­டங்­க­ளிலும் ஏனைய சில­பி­ராந்­தி­யங்­க­ளிலும் பிற்­பகல் வேளையில் மழை­யோ­அல்­லது இடி­யுடன் கூடி­ய­ம­ழையோ பெய்­யக்­கூடும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இடி­யுடன் கூடி­ய­ம­ழை­பெய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்­த­காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டும் கால நிலை அவதான நிலையம் மின்னலினால் ஏற்படும் இழப்புக்களை குறைப்பதற்காக பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment