26 May 2016

காணாமல் போனோர் விடயங்களைக் கையாள விசேட பணியகம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு: திருத்த யோசனைகளும் முன்வைப்பு
கடந்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் விபரங்களை அறிந்துகொள்ளவும், தகவல்களை உறவினர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும் பொருட்டு விசேட பணியகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த விசேட பிரேரணையின் மூலம் இந்த யோசனையை முன்வைத்திருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரேரணைக்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. காணாமற் போயுள்ளதாக அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நிலைமைகளின் கீழ் காணாமற் போன அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ள நபர்கள் தொடர்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவ்வாறு காணாமற் போயுள்ள நபர்கள் தொடர்பான விபரங்கள் அவர்களது உறவினர்களுக்கு அத்தியாவசியமானதாம். அவ்வாறே காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பான உண்மையான தகவல்களை அவர்களது உறவினருக்கு தெரியப்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை அடைந்துக்கொள்ள முடியும்.
காணாமற் போனவர்கள் சம்பந்தமாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், காணாமற்போனோர் மற்றும் அவர்களது உறவினர்களின் உரிமைகள் மற்றும் பற்றுதல்களை பாதுகாத்துக்கொள்ளல் அறிவுறுத்தல், அரச நிறுவனங்கள் மற்றும் வேறு நிறுவனங்கள் மூலம் கண்டு பிடிப்பதற்கு முடியாமற்போன நபர்களின் விபரங்கள் அடங்கிய தரவுகளை திரட்டி மத்திய தரவு வலையமைப்பொன்றை ஏற்படுத்தி கோவைப்படுத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க காணாமற்போனோர் சம்பந்தமான பணியகம் எனும் பெயரில் சுயாதீன பணியகம் ஒன்றை தாபிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையில் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு அரசாங்கம் அமைக்கவுள்ள தனிப் பணியகம் குறித்தான ஆரம்ப கட்ட வரைவுநகலின் 90 வீதமான சிபார்சுகளுக்கு தமிழ் தேசியகூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்நகல் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் நன்கு பரிசீலிக்கப்பட்டது.
இதில் சில பரிந்துரைகளை மாற்றியமைக்குமாறு கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில், இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி அமெரிக்காவால் கடந்த வருடம் செம்டெம்பர் மாதம் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
இதன்படி, நான்கு கட்டமைப்புகளின் கீழ் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசு தயாரானது.
இதில் காணாமல்போனோர் பணியகத்தை அமைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களும் அடங்குகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னர் காணாமல்போனோர் பணியகத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, மேற்படி சட்டமூலத்தின் ஆரம்பகட்ட வரைவுநகல் (முதலாவது வரைவு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது 90 சதவீதமான சிபாரிசுகளை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய குறைபாடுகளை மாற்றியமைக்கும்படி சிபாரிசுகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
அத்துடன், காணாமல்போனோர் குறித்து முழு தகவல்களையும் அறிந்துகொள்ளும் உரிமை அவர்களது உறவினர்களுக்கு உள்ளதாகவும் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அமையவே தற்போது இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
மேற்படி பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், பரணமக ஆணைக்குழு கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு அரசாங்கம் அமைக்கவுள்ள தனிப் பணியகம் குறித்தான ஆரம்ப கட்ட வரைவுநகலின் 90 வீதமான சிபார்சுகளுக்கு தமிழ் தேசியகூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.இந்நகல் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் கையளிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பில் நன்கு பரிசீலிக்கப்பட்டது.
இதில் சில பரிந்துரைகளை மாற்றியமைக்குமாறு கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில், இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி அமெரிக்காவால் கடந்த வருடம் செம்டெம்பர் மாதம் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியிருந்தது. இதன்படி, நான்கு கட்டமைப்புகளின் கீழ் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசு தயாரானது.
இதில் காணாமல்போனோர் பணியகத்தை அமைத்தல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களும் அடங்குகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னர் காணாமல்போனோர் பணியகத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, மேற்படி சட்டமூலத்தின் ஆரம்பகட்ட வரைவுநகல் (முதலாவது வரைவு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது 90 சதவீதமான சிபாரிசுகளை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் உள்ள சில முக்கிய குறைபாடுகளை மாற்றியமைக்கும்படி சிபாரிசுகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
அத்துடன், காணாமல்போனோர் குறித்து முழு தகவல்களையும் அறிந்துகொள்ளும் உரிமை அவர்களது உறவினர்களுக்கு உள்ளதாகவும் கூட்டமைப்பு அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அமையவே தற்போது இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
இதேவேளை, மேற்படி பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், பரணமக ஆணைக்குழு கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நன்றி- தினகரன்

No comments:

Post a Comment