22 July 2009

இடம்பெயர்ந்த மக்களில் மூவாயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றம் - பசில்ராஜபக்ஷ

இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 3000 குடும்பங்கள் எதிர் வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதிக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அதற்காண அனுமதியும் பெறப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாணத்துக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ வவுனியா மாவட்ட செயலகத்தில் 21-07-2009 நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் வடக்கு வசந்தம் வேலைத் திட்டம் தொடர்பான மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 180 நாள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விவசாய வீதி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், மீள்குடியேற்றம், நிலக்கண்ணி அகற்றல் என்பன குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. நீர்ப்பாசன திட்டங்களுக்கென 15.4 மில்லியன் ரூபாவும் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கான பாடசாலை கட்டிடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த 30 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும் எனவும், வவுனியா வடக்கு பகுதியிலுள்ள மருத்துவ அதிகாரி காரியாலயத்தை புனரமைக்கவும் இரண்டு வாரத்தில் 10 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்கவும் விவசாயத் திட்டங்களுக்கென 32.6 மில்லியன் ரூபா ஒதுக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. சேதமடைந்த பாடசாலை கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகளின் குறைபாடுகள் என்பன தீர்க்கப்பட்டு வருகின்றன எனவும் பசில் ராஜபக்ஷ கூறினார். பாதுகாப்புப் படையின் உதவியுடன் மிதிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்பொழுது வவுனியா மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 1,46,298 பேர் வசிக்கின்றனர். மேலும் 35,866 பேர் மீள் குடியேற்றப்படவுள்ளனர் என்றார்.

இம் மாநாட்டில் வட மாகாண ஆளுநர் மாகாண பிரதம செயலாளர் எஸ். சிவகாமி மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட அரச அதிபர், திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment