03 October 2018

ரஜனியின் கேள்விகளுக்கு தமிழ் உயரடுக்கினர் பதில் கூற மறுத்துவிட்டார்கள்- ராஜன் ஹ-ல்


மழைக்காலமும் முன்னிருட்டும் வருடம் முடியப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகளாக உள்ளன. வயல்கள் உழுது பண்படுத்தப்பட்டு விதைத்து  பூமியின் புதுப்பித்தலுக்காகவும் மற்றும் தாராள விளைச்சலுக்காகவும் தயாராக இருக்கின்றன. அப்படியான ஒரு நேரத்தில்தான் இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்பு ரஜனி திரணகம எல்.ரீ.ரீ. இனால் கொல்லப்பட்டார். அவரது கேள்விகளும் மற்றும் உண்மையை பிரதிபலிக்கும் மொழிகளும் பெரும்பாலும் அடிப்படையில் நமது ஊகங்களுக்குச் சவால்விடுத்தன. 1988 ஒக்ரோபரில் அவரால் எழுதப்பட்ட மாயைகளை ஒதுக்கித் தள்ளுதல் எனும் கீழ்காணும் மேல்முறையீடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொது அறையில் வைத்து 50 கல்வியாளர்களால் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களுக்கு இடையே உள்ள எமது உறவுகளை மட்டுமல்ல ஆனால் எங்களைப் பற்றியும் நாங்கள் ஆராய வேண்டும். சமூகத்தினிடையே உள்ள பயங்கரவாதத்துக்குத் தலை வணங்குதல், நமது சந்தர்ப்பவாதம் மற்றும் பல உள்ளகக் கொலைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையில் கொள்கைகளின் பற்றாக்குறை, என்பன வெளிச்சக்திகள் அதே ஆயுதங்களைப் பயன்படுத்தி எங்களைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கியுள்ளன. சமூகத்தினுள்ளேயே ஜனநாயக விரோதப் போக்குகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கும்போது, ஜனநாயகத்துக்கான எங்கள் வேண்டுகோள் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாக மாறிவிடுகிறது. அரசியல் சக்திகளை விமர்சித்து குரலெழுப்பும் பல தனி நபர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இங்கிருந்து அகற்றப்பட்டு அல்லது கொல்லப்பட்டுவிடுகிறார்கள்.
பல்கலைக்கழகத்தின் தொடக்கம் முதலே அதே பொது அறையில்; எங்களது மறைந்த கல்வியாளர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் ரஜனியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பதைப்பற்றி பல வருடங்களாக அங்கு வரும் வருகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்;. 2014ல் பல்கலைக்கழக அதிகாரிகள் (பின்னோக்கிப் பார்த்ததில் பல்கலைக்கழக உப வேந்தரை மட்டும் தனியாகக் குறிப்பிடுவது தவறு என்று நான் நினைக்கிறேன்) ரஜனியின் கொலையின் 25 வது ஆண்டு நிறைவை நினைவு கூருவதை கடிவாளம் இட்டுத் தடுத்தார்கள். ஒரு நேர அட்டவணையின்படி அவர் பரீட்சைகளை நடத்தியது கொலையாளிகளுக்கு அவரது கொலையை திட்டம்தீட்டுவதை எளிதாக்கியது.
குறுகிய சிறிது கால இடைவெளியில் இதே பொது அறையில், தலைவர் ஒரு அரசியல் பரிசைக் கைப்பற்றுவதற்காக அவரது வற்புறுத்தலின் கீழ் காந்திய வழியில் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த எல்.ரீ.ரீ. யின் திலீபனின் 31வது ஆண்டு நிறைவு ஒரு தியாகத் திருவிழாவாக பெரும் வைபவமாகக் கொண்டாடப்பட்டது, அதற்கு உப வேந்தரே முன்னின்று உழைத்தார். சிறிது நாட்களின் பின் எல்.ரீ.ரீ. இனால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது, அதிலும் வழக்கம்போல மூத்த பல்கலைக்கழக அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தார்கள்.
அதன் விளைவு மிகை யதார்த்தம் ஆகும். இந்த நடவடிக்கைகள் யாவும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் கண்களின் கீழேயே நடைபெற்றன, இதே பாதுகாப்பு படைகள் 2014ல் மருத்துவ மாணவர்கள் சங்கம் ரஜனியின் மரணத்தை நினைவு கூருவதை, பீடாதிபதிக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தினார்கள்.
மிருகத்தனமான  தீவிரம் நிறைந்த தமிழ் தேசியவாதத்தை மகிமைப்படுத்தும் தற்போதைய விழாக்களில் முக்கியமாகக் கலந்து சிறப்பிக்கும் அதே பல்கலைக்கழக அதிகாரிகள், கொழும்பில் உள்ள அதிகார சக்திகளைக் கையாளும்போது வித்தியாசமான வேறு முகத்தைக் காட்டுகிறார்கள், இப்பேர்பட்டவர்களின் சகிப்புத் தன்மையினால் பல்கலைக்கழகத்தின் பிற்போக்கான சிதைவு நிலை தொடர்கிறது. ஒரு நெருக்கமான பாரம்பரியத்தை வலுப்படுத்துவதற்காக நன்கு தகுதி பெற்ற கல்வியாளர்களை வெளியேற்றிவிட்டு, பொங்கு தமிழ் மற்றும் அதன் வீர வழிபாடு என்பனவற்றை வைத்துக்கொண்டிருக்கிறது இதன் காரணமாக எங்கள் வரலாற்றின் மிகவும் நெருக்கமானதும் வருந்தத்தக்கதுமான அம்சங்கள் வதந்தி நிலைக்கு கீழிறங்கியுள்ளன. ரஜனி ஏன் வெறுக்கப்படுகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்
1982ல் ரஜனி ஒரு மருத்துவராகக் கடமையாற்;றிய வேளையில், வேறு யாரும் விருப்பமில்லாமல் இருந்தபோது, எல்.ரீ.ரீ, தலைவரின் விருப்பத்துக்குரிய ஒருவராக இருந்த சீலன், தவறுதலான ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக இரவு நேரத்தில் சென்றார் (முறிந்த பனைமரம் என்ற நூலைப் பார்க்க). சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் வைத்து, அந்த இயக்கத்தின் உள்ளக மிருகத்தனம் மற்றும் சகிப்புத் தன்மையற்ற நிலை என்பனவற்றையும் மற்றும் சீலன் எவ்வாறு ஒரு கொலை வெறிக்குத் தூண்டப்பட்டார் என்பதையும் அவர் அறிந்து கொண்டதும், சீலனது செயற்பாட்டுக்காக கசப்புடன் வருத்தமடைந்தார்: குறிப்பாக புளொட் இயக்க சுந்தரத்தை அவரது தலைவரின் கட்டளைப்படி கொலை செய்ததுக்காக (அவரும் என்னைப் போன்ற ஒரு சுதந்திரப் போராளி). சீலன் தென்மராட்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட முகாமில் தங்கியிருந்தபோது, அங்கிருந்து வெளியேறும்படி அவசர அழைப்புகள் வந்தபோதிலும் அதற்கு மாறாக ஜூலை 1983ல் முகாம் இராணுவத்தின்  திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.
எல்.ரீ.ரீ. க்கு உதவி செய்யும் ரஜனியின் ஆர்வம் 1986ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு திரும்பவும் சென்று தனது செயல்பாட்டின் மூலம் சவால் விடுவது என்கிற தீர்மானமாக உருவெடுத்தது. இயக்கத்தில் இருந்து முறித்துக்கொண்ட பின்னர் இயக்கத்தின் மனித நேயமற்ற கலாச்சாரம் காரணமாக எத்தனை இளைஞர்கள் இறந்துபோனார்கள், எங்கள் சிடுமூஞ்சிகளான உயரடுக்கினரால் அவர்கள் மாவீரர்களாக மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ரஜனியின் மரபியலின் முரண்பாடு மற்றும் அச்சம் என்பன திரும்பவும் நலிந்த தரத்தினரான தமிழ் உயரடுக்கினர்மீது அன்பு கொள்ள வைத்தது. அவரது வாழ்க்கை மற்றும் அனுபவம் என்பன, எங்கள் வாழ்க்கை மற்றும் உணர்ச்சிகள் காரணமாக அழிவுற்ற ஒரு மலிவான வரலாற்று சகாப்தத்தை தூய்மைப் படுத்துவதற்காக வேண்டி போராட்டம் நடத்தின.
கல்வியைப் பொறுத்தவரை, யுத்தத்துக்குப் பின்னான ஒரு முன்னுரிமையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பார்வையை மேம்படுத்துவதுடன் மதச்சார்பற்ற மரபுகளை வலுப்படுத்தி மற்றும் உலகெங்கிலும் உள்ள கல்விமான்களின் சுதந்திரமான இயக்கத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்று அதற்கு மாறாக மத மற்றும் அரசியல் பிரிவினைவாதம் என்பன பல பல்கலைக்கழகங்களில்  அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனம் மிக்க கனிவான உற்சாகத்துடன் எம்மை முகத்துக்கு நேரே வெறித்துப் பார்க்கின்றன.
ஒரு அரசியல் தீர்வு எழுபது வருடமாகக் காத்துக்கிடக்கிறது ஒருவேளை இன்னும் ஒரு எழுபது வருடங்கள் அதற்காகக் காத்திருக்க வேண்டி ஏற்படலாம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மதிப்பிறக்கம் சாத்தியமான சமூகமாக எஞ்சியுள்ள தமிழ் மக்களுக்கு ஆபத்தை உண்டுபண்ணும். என்னுடைய தீர்ப்பின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பெரிய தவறு இலகுவாகத் திருத்தப்படலாம். அது திரும்பவும் தமிழ் தேசியவாதத்தின் பிறப்பிடத்துக்கும் மற்றும் பதில் சொல்லப்படாத ரஜனியின் கேள்விகளுக்கும் செல்கிறது.
இதே கேள்விகள்தான் இளம் தமிழ் ஊடகவியலாளரான ஜூட் ரத்னம் என்பவர் தயாரித்து சர்வதேச ரீதியான பாராட்டுக்களைப் பெற்ற சொர்க்கத்தில் பேய்கள் எனும் ஆவணப்படத்திலும் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கான பிரதிபலிப்பை வசதியான தமிழ் இளைஞர்கள் சிலர் பிபிசி யில் வெளிப்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட விடயத்தில் குருடாக இருந்ததுக்காக ஜூட் மீது குற்றம் சொல்ல முடியாது, ஆனால் அவரது படைப்பினைப் பற்றிய பிரதான விமர்சனம், தமிழ் கலாச்சாரத்தின் மிருகத்தனமான செயல்களை ஆராய்ந்து அதைப் படுகுழியில் தள்ளிவிடுவதற்கு மேற்கொள்ளும் எந்த முயற்சிக்கும் முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொடூரமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என நாங்கள் கருதுகிறோம், இல்லாவிடில் இது எங்கள் மனதைத் திறந்து உலகமும் அதன் பாரம்பரியமும் வழங்கவுள்ளதைக் காண அனுமதிக்காது.
சமூகத்தின் நிலை உண்மையில் பிசாசுக்கு ஒப்பாக இருக்கலாம். இந்த நிகழ்வுக்கு பல்கலைக்கழகம் ஒரு மையமாக இல்லை. அது தமிழ் உயரடுக்கினருடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட போலி உபகாரச்சம்பளம் எனும் உலகளாவிய ஒரு வலையமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. எங்களது உள்ளகச் சிதைவுகளுன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் கொடூரங்கள் இரண்டாம் நிலையிலேயே உள்ளன, மற்றும் முக்கியமாக  புலிகளின் கொடூரங்கள் மற்றும் சகிப்புத்தன்மையற்ற நிலை என்பன தமிழ் உயரடுக்கினரின் பாராளுமன்ற அரசியலின் திவால்தன்மையின் விளைவுகள் ஆகும் என்று ரஜனி குறிப்பிட்டுள்ளார். இது விவாதங்கள் மற்றும் இணைய உலா போன்ற சௌகரியமான சூழலில் இருந்து அவருக்கு கிடைத்தது அல்ல, இது எல்.ரீ.ரீ.ஈக்கு உதவுவதற்காக அவர் மேற்கொண்ட உயர்ந்த தியாகங்களில் இருந்து ஆரம்பமானது.
தமிழ் தேசியவாதம்: திசை மாற்றம் மற்றும் ஆபத்தான காட்டிக்கொடுப்பு
தமிழ் தேசியவாத அரசியல் மற்றும் பிரபாகரனை மகிமைப்படுத்துதல் என்பனவற்றை எல்.ரீ.ரீ. இனது பாரம்பரியத்தில் இருந்து வேறுபடுத்தும் முயற்சியில் இன்று நாங்கள் நேரத்தைச் செலவிடவேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றிலும் மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (பெடரல் கட்சி), தமிழ் தேசிய மக்கள் முன்னணி(தமிழ் காங்கிரஸ்), முதலமைச்சர் விக்னேஸ்வரன், பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் பிரதான நீரோட்டத்தில் உள்ள தமிழ் ஊடகங்கள் என்பன இந்த மரபுரிமையைக் கைப்பற்றுவதற்காகப் போட்டிபோடுகின்றன. சிங்களத் தலைமைகளில் நம்பிக்கையிழந்த செல்வநாயகம், உரும்பராயிலுள்ள சிவகுமாரனின் சிலைக்கு மாலையணிவித்ததின் மூலம் போர்க்குணத்தின் ஆரம்பத்தை ஆசீர்வதித்தார் என்றும் ஆகையினால் அதன்படி பிரபாகரன் இரட்சகராக ஆனார் என்றும் போலியான ஒரு தர்க்க வாதம் தற்போது நடப்பிலுள்ளது. ரஜனி தனது முறிந்த பனைமரம் நூலில் இந்த வாதங்களின் அடிப்படையையே குப்பையில் போட்டுள்ளார்.
சிங்கள தேசியவாதத்தை ஒரு அரசியல் சக்தியாக எடுத்துக்கொண்டால் அதன் பிரதான ஆசிரியர்கள் உருமாற்றமடைந்த இலங்கை தேசிய காங்கிரஸின் சேனநாயக்கா மற்றும் சிங்கள மகா சபையை சேர்ந்த பண்டாரநாயக்கா ஆகியோராவர். 1930 களில் அவர்கள் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை மறுப்பதற்காக வெளிப்படையாகக் காட்சிகளைச் சித்தரித்து ஒருவருக்கொருவர் கடும் போட்டியிட்டார்கள். ஆளுனர் கல்டிகொட்டின் கருணையினால் 1941 முதல் தேர்தலை நடத்தாமல் அவர் 1946 வரை அதிகாரத்தில் இருந்தார், 1930 களின் ஆரம்பத்தில் இருந்து இடதுசாரிகளின் மெதுவான முன்னேற்றத்துக்குப் பின்னர் தேர்தல் வரைபடம் மாற்றப்பட்டதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். இதன்படி இரண்டு போட்டியாளர்களும் சிங்களவர்களின் வாக்குகள் பிளவுபடக் கூடாது என்கிற காரணத்துக்காக ஐதேக வினை உருவாக்கினார்கள்.
1947 பாராளுமன்றத் தேர்தல்கள் ஒரு சிறுபான்மை ஐதேக அரசாங்கத்தை கொண்டுவந்தது, மொத்தமுள்ள போட்டியிடும் 95 தொகுதிகளில் அது 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது, 4 ஆங்கிலேயர்களையும் மற்றும் 1 பறங்கியரையும் கொண்ட 5 நியமன உறுப்பினர்களின் ஆதரவு தவிர, இடதுசாரிகளில் பிளவு பட்டவர்கள் மற்றும் பிரித்தானியர்களின் ஆதரவு என்பன பின்புலத்தில் கிடைத்திருக்காவிட்டால்; அதனால் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. 1948ல் சுதந்திரம் பெற்றதின் பின்னர் அதன் பலவீனமான பிணைப்பை ஒருங்கிணைத்துக்கொள்ளும் வகையில் இரண்டு பெரிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டன, அவை  ஜூன்மாதம் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் விரோத  தொழிற் சங்கங்கள் (திருத்த) மசோதா மற்றும் ஆகஸ்ட் மாதம்  தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதா என்பனவாகும்.
இந்த மசோதாக்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது, தமிழ் காங்கிரஸில் உள்ள ஏழு பாராளுமன்ற அங்கத்தவர்களின் ஆதரவை அரசாங்கம் பெற்றுக்கொள்வதில்தான் தங்கியுள்ளது என்பதை சேனநாயக்கா உணர்ந்திருந்தார். ஒரு அமைச்சவைப் பதவி தருவதாகத் தூண்டில் வீசப்பட்டதும் ஜி.ஜி.பொன்னம்பலம் அதில் மாட்டிக்கொண்டார். அந்த பெரிய பரிசுக்குரிய சோதனை ஓட்டமாக  தொழிற் சங்கங்கள் மசோதா பரீட்சிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்தது பிரித்தானியாவில் உள்ள நடைமுறையைப் மாற்றுவதன் மூலம் தொழிற் சங்கங்களை பலீவீனமாக்கும் செயல். 1927 பிரித்தானியச்சட்டம் அரசாங்க ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. 1935ம் ஆண்டின் இலங்கைச் சட்டம் பிரித்தானியச் சட்டத்தைப் பின்பற்றியது. 1946ல் தொழிற்கட்சி அரசாங்கம் 1927 பிரித்தானியச் சட்டத்தை ரத்து செய்தது.1948ல் இலங்கை அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தின் மூலம் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இணைப்பை மேலும் இறுக்கமாக்கியது.
இதற்கான விவாதத்தில் தனது முடிவுரையாக ஜி.ஜி பொன்னம்பலம் பின்வருமாறு தெரிவித்தார், கூட்டு அரசியல் குறிக்கோள்கள் வழங்கப்பட்டால், அவை விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த நாட்டில் சர்வாதிகாரம் ஏற்படுவதற்கான ஒரு கருவியாக அமைந்துவிடும் என்பதற்கான சாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கவே எனக்கு நடுக்கமாக உள்ளது. அது கம்யுனிச எச்சரிக்கைக்கான அழைப்பாகும், தொழிற் சங்கங்கள் மசோதாவில் செல்வநாயகம் உட்பட தமிழ்காங்கிரஸ் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்தது. அதுதான் செல்வநாயகத்தின் முதலாவதும் பெரியதுமான அரசியல் தவறு. செனட் சபையில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்த்த இரண்டு தமிழர்கள் சோமசுந்தரம் நடேசன் மற்றும் .எம்.வி நாகநாதன் ஆகியோர். எந்தக் காலத்திலும் }னமும் அனுதாபமும் உள்ள சிங்கள பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு எதிராக தமிழ் காங்கிரஸ் தன்னை விலக்கிக்கொண்டதால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளமானவை. குடியுரிமை சட்ட மசோதாவில் பொன்னம்பலத்தின் கீழ்படிவினைப் பரீட்சித்த பின்னர் சேனநாயக்கா அவருக்கு மந்திரிப் பதவியை வழங்கினார்.
குடியுரிமைச்சட்ட மசோதா (20 ஆகஸ்ட்) வில் தனது அரசியல் பெயரைக் காப்பாற்றுவதற்காக பொன்னம்பலம் முறையற்றவிதத்தில் வாக்களித்தவர்களின் பெயர்ப்பட்டியலை ஹன்சார்ட்டில் பிரசுரிக்கப்படாமல் பாதுகாத்தார் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன. விவாத மன்றில் இருந்து தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மனச்சாட்சி இடம் கொடுக்காததால் செல்வநாயகம் அந்த அணியில் இருந்து பிரிந்து குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிராகப் பேசியதுடன் அதற்கு எதிராகவும் வாக்களித்தார். அமைதியாக இருந்தாலும், செல்வநாகத்துடன் சேரவோ மற்றும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவோ சிரமமாக இருப்பதை பொன்னம்பலம் உணர்ந்தார். அந்த மசோதா ஆதரவாக 53 வாக்குகளும் மற்றும் எதிராக 35 வாக்குகளும் பெற்று நிறைவேறியது. எதிராக 40 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் சபைக்கு வரவில்லை. துணிவான ஊடகவியலாளர் ஒருவர், ஆகஸ்ட் 21ல் எவ்வாறு வாக்களிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்தியிருந்தார். செனட் சபையில் நடேசன் மற்றும் நாகநாதன் ஆகியோர் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்கள். செப்ரம்பர் 2ல் பொன்னம்பலம் அமைச்சராக்கப்பட்டார்.
குடியுரிமைச்சட்டம் சிறுபான்மையினர் மேல் விழுந்த பலத்த அடியாகும், தமிழ் காங்கிரஸ் தீர்மானிக்கப்பட்ட எதிர்ப்பைக் காட்டியதால், ஒன்றில் அதை நிறுத்துவதோ அல்லது தொடர்ந்து முன்னெடுப்பதோ அரசாங்கத்துக்கு செலவு மிக்கதாக இருந்தது. தான் அவர்களுக்காக நிற்கப் போவதாக மலையகத் தமிழர்களுக்கு வாக்குறுதி வழங்கிய பின்னர், பொன்னம்பலம் அவரது சக்தி மிக்க வாதத்திறமை கொண்டு ஒருவார்த்தைகூட அவர்களுக்காக  உச்சரிக்கவில்லை.; சிறுபான்மையினரின் எதிர்காலம் ஆபத்திலுள்ளது என்கிற செய்தி தமிழ் காங்கிரசினால் உரத்து தெளிவாக தெரிவிக்கப் பட்டதால், அமைச்சர்களான சுந்தரலிங்கம் மற்றும் சிற்றம்பலம் உட்பட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த தமிழர்களும் மற்றும் முஸ்லிம்களும் அது ஒரு விலையுயுர்ந்த செயல் என்பதைக் கண்டார்கள். எல்லாவற்றையும் விட, ஒரு பலவீனமான அரசாங்கம் மசோதாவுக்கு ஆதரவு உறுதிப்படுத்துவதற்காக சலுகைகளை விற்பனை செய்தது. நியமன அங்கத்தவர்களிடம்  நிலையான ஆதரவை வழங்கும்படி உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கலாம்.
தோட்டப்பகுதி தமிழர்கள், அதன்படி சிறுபான்மையினர் மீதான இந்தக் காடடிக்கொடுப்பின்போது, அரசாங்க சேவையில் உள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்துடன் இணைவது நல்லது என்று பார்க்கப்பட்ட அந்த வேளையில் அது தொடர்பாக அநேக தமிழர்களின் பெயர்கள் பொன்னம்பலத்தால் வலியுறத்தப்பட்டன. அவர்களில் சிலர் செனட்டர் .ஜே. ராஜநாயகம் மற்றும் செல்லப்பா குமாரசாமி ஆகியோராவர். செல்வநாயகத்தின் சுயசரிதம் பற்றி எழுதிய .ஜே.வில்சன், தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்பிய முக்கிய தமிழர்கள் பலரின் பெயர்களை அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தமிழர்களின் மத்தியில் இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த ஹன்டி பேரின்பநாயகம் மற்றும் கே.நேசையா ஆகியோரும் இருந்தனர், டொனமூர் சகாப்தத்தில் மலையகத் தமிழர்களின் கதி ஒரு முன்னணிப் பிரச்சினையாக இருந்த போதிலும் அது பெருமளவில் மௌனமாகவே விடப்பட்டதாகவே தோன்றியது.
தனது சொந்த வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் உயரடுக்கினரின் பொய்முகங்களுக்கு மாறாக செல்வநாயகம் மலையகத் தமிழர்களின் பக்கம் நின்றது அவரது பெருந்தன்மையை எடுத்துக்காட்டியது. நாகநாதன் மற்றும் அறிஞரான நடேசன் ஆகியோரின் பின்துணை இல்லாதிருப்பின் அவர் பெரிதும் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவராக இருந்திருப்பார். இவர்கள் மூவரிடையேயும் இருந்த உறவு வெளியே தெரியாத ஒரு பகுதியாக இருந்தது. தமிழ் தலைமை பரிதாபகரமாக தோல்வியடைந்த அந்தக் கட்டத்தில், செல்வநாயகம் ஏன் போராட்டத்தை தனது கைகளில் எடுத்துக்கொண்டு முன்னேறத் தவறினார் என்பதற்கான விளக்கம் தேவைப்படுகிறது.
இப்படியாகத் தமிழர்கள் பெரிதுபடுத்தப்பட்ட முக்கியமான உணர்வுகளுக்காக அவர்களது சொந்த உயரடுக்குத் தமிழர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். அதை விழுங்கிக் கொள்வது கடினம் மற்றும் எங்கள் இழப்புகளுக்கு காரணம் துரோகிகள் எனக் கண்டறிந்ததால், பிசாசுக்கு ஒப்பான சதிகளையும் மற்றும் சிதைந்துபோகும் சித்திரவதைக் கொலைகளில் ஏற்படும் தவறான திருப்தியையும் எங்களுக்கு விட்டுச் சென்றனர். ஸ்ரீலங்காப் படைகளின் மிகப்பெரிய மீறல்களைப் பற்றி நாட்டின் நலன்களுக்காக ஒரு முழுதான மற்றும் நம்பகமான ஒரு நீதி விசாரணை தேவைப்படுகிறது, ஆனால் தெரிந்து கொண்டே போரை ஆரம்பித்தவர்கள்தான் முதல் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது நினைவிலிருக்கட்டும். இந்த நாட்டில் 1987 ஒக்ரோபர் முதல் அனைத்து யுத்தங்களும் தேவையில்லாமால் கட்டுப்பாட்டை தம்வசம் வைத்திருப்பதற்காக எல்.ரீ.ரீ. இனால் ஆரம்பிக்கப்பட்டவையாகும், இது சிங்களவர்கள் மீதான கட்டப்பாட்டை கைப்பற்றுவதற்காக அல்ல, ஆனால் தங்கள் சக தமீழர்கள் மீதான கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்காக நிலம்,மனித உயிர்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பற்றிய இழப்புகளைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டவை. வறியவர்கள் மத்தியில் இழப்புகள் பற்றிய உணர்வு முறையான மீள்குடியேற்றத்தை அரசாங்கம் அலட்சியம் செய்வதை பற்றி ஏற்பட்டுள்ளது.
2009ன் ஆரம்பம் முதலே, இராணுவம் முன்னேறி வருவதன் காரணமாக அதற்கு முகம் கொடுக்காமல் எந்த வழியிலும்; தப்பிச் செல்ல பொதுமக்கள் விரும்பினார்கள் என்பது பெரும்பாலான தமிழர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து இருந்தது, மற்றும் தப்பிச் செல்ல முயலும் தமிழர்களை எல்.ரீ.ரீ, கொலை செய்தது. இருந்தும் பல முன்னணித் தமிழர்கள் மற்றும் ரி.என். தலைவர்கள் ஆகியோர், தமிழர்களின் துன்பங்களுக்கு பிரத்தியேகமாக இராணுவம் மட்டுமே காரணம் என்று குற்றம்சாட்டி வந்தார்கள். 20 வருடங்களுக்குள் சின்ன விஷயங்கள் கூட எப்படி மாறியுள்ளன. 21 ஒக்ரோபர் 1987ல் இந்திய இராணுவம் யாழ்ப்பாண மருத்துவ மனையில் எவ்வாறு படுகொலைகள் புரிந்தன என்பதனை ரஜனி விளக்கியுள்ளார்.
புலிகள் அங்கு இருந்தனர், அது எல்.ரீ.ரீ. பக்கமிருந்து வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியாகவும் இருக்கலாம். அவர்கள் இரண்டு தொகுதிகளாக உள்ளே வந்தார்கள். மருத்துவாகள் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி கெஞ்சியபோது, புலிகள் பரவலாக சில சுற்று துப்பாக்கிச் சூடுகளை நடத்திவிட்டு, சில ஆயுதங்களை உள்ளே வைத்துவிட்டதன் பின்னரே புறப்பட்டுச் சென்றார்கள். இந்திய இராணுவம் ஒரு மணி நேரமோ அல்லது அதற்குப் பின்னரோதான் அங்கு வந்தார்கள், அந்த நேரம் எதிர்த்து பதிலடி கொடுப்பதற்கு உள்ளே யாரும் இருக்கவில்லை.
ஒரு போரை அரம்பிப்பதற்கு குழப்பங்கள் மற்றும் கொலைகளை ஏற்படுத்த வேண்டும். யுத்த முனையில் தான் தெரிவு செய்யாத ஒரு போரை நடத்தும் ஒரு வீரன்மீது பழி சுமத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது. பொய்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு  போரைத் தக்க வைத்துக் கொள்பவர்கள், ஏராளமான தங்கள் சொந்த மக்களையே துன்பப்பட வைக்கிறார்கள், இவர்கள்தான் குற்றம் சுமத்தப்பட தகுதியானவர்கள். அதனால்தான் ஜூட் ரட்னத்தின் சொர்க்கத்தில் பேய்கள் ஆவணப்படத்திற்கு எதிரான பாரபட்சமான குற்றச்சாட்டுகள் ஒரு தீய வளையமாக உள்ளது.
எங்கள் காலத்தில் நடேச ஐயரைப் போன்ற ஒரு சிறந்த மனிதர் எம்மிடையே வாழ்ந்ததுக்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும், 20 வருடங்களுக்கு மேலாக துரதிஷ்டமான தோட்டத் தமிழ் மக்களின் துயரங்களுக்குச் சாட்சியாக இருந்த அவர், இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு பிரித்தானிய அல்லது இந்திய அரசாங்கத்தை நம்பியிருப்பது அர்த்தமற்றது என்பதை உணர்ந்தார். சிங்களவர்களுடன் பேசுவதால் மட்டுமே தங்களால் இதற்குத் தீர்வு காணமுடியும் என்று அவர் தீர்மானித்தார். பேர்னாட் அலுவிகார மற்றும் செனரத் குணவர்தன உட்பட்ட பல கண்டியத் iவைர்கள் அவரை மரியாதையாக நடத்தினார்கள், மற்றும் 1947ல் அவரது மரணத்துக்குப் பின்னரும் அவரது நம்பிக்கைகள் ஏமாற்றிவிடவில்லை. மனதில் கண்டிய விவசாயிகளின் நலன்களில் அக்கறை கொண்ட அநேக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தோட்டத் தமிழர்களின் குடியுரிமையை மறுத்த குடியுரிமைச்சட்ட மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களில் ரி.பி.சுபசிங்கா, ரி.பி.இலங்கரத்ன, எச்.சிறி நிசங்க, என்.எம்.பெரேரா, றொபேட் குணவர்தன, குசுமா குணவர்தன, ஆர்.எஸ்.பெல்பொல மற்றும் .எம்.ஆர்..இரியகொல்ல ஆகியோர் அடங்குவார்கள். அவர்கள் வெறுக்கத்தக்க மரபுகளைக் கொண்ட சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்கா ஆகியோரைக் கடந்து வரவேண்டியிருந்தது.

1948
ல் தொழிற் சங்க மசோதாவுக்கு ஆதரவாக சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டு சேர்ந்ததின் காரணமாக தமிழ் தேசியவாதிகள் சாத்தியமான சிங்களக் கூட்டணியினரை அலட்சியப்படுத்தி தாங்களே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். இப்போது தமிழர்களாகிய நாங்கள் மேற்கு, புது தில்லி மற்றும் ஜெனிவா என்று போய் தீர்வினைத் தேடிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அது பிடிகொடாமல் எங்களிடம் இருந்து நழுவிக் கொண்டிருக்கிறது. சிங்களவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற நேரம் இது இல்லையா? இதுதான் ரஜனியின் இதயத்துக்கு நெருக்கமாக இருந்த ஒரு விடயம்.

நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment