15 May 2009

வி.ஜே.நம்பியார் மீண்டும் இலங்கை வரவுள்ளார்

தற்போது வன்னி பிரதேசத்தில் இடம் பெற்றுவரும் மோதல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் தமது செயலகத்தின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரை அவசரமாக இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான மேரி ஒகாபே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இலங்கையில் நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராயும்படி இலங்கை அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், அங்கு மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதையும், இரத்தம் சிந்தப்படுவதை தடுக்கவுமான சாத்தியக் கூறுகளை அனைவருக்கும் தெரியும்படி அறிவிக்கவும் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போல் விடுதலைப் புலிகளும் பொறுப்புணர்வோடும் ஆக்கபூர்வமாகவும் பரிசீலிக்க வேண்டும் எனவும் ஐ நாவின் தலைமைச் செயலர் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா வின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.இந்த மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையிலேயே செயலகத்தின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார்.

No comments:

Post a Comment