16 December 2011

ey;ypzf;f Mizf;FO mwpf;if jhf;fy;

,yq;ifg; Nghupd; ,Wjp fl;lj;jpy; ,yq;if ,uhZtk; nghJkf;fs; jug;gpy; capu; ,og;ig jtpu;f;f jk;khy; Kbe;j midj;ijAk; nra;jjhf ,yq;ifg; Nghupd; ,Wjpf; fl;l epfo;Tfs; Fwpj;J Muha;e;j> ,yq;if [dhjpgjpahy; epakpf;fg;gl;l> gbg;gpidfs; kw;Wk; ey;ypzf;f Mizf; FO $wpAs;sJ.

,e;j Mizf;FOtpd; mwpf;if ehlhSkd;wj;jpy; nts;spad;W jhf;fy; nra;ag;gl;Ls;sJ.

nghJkf;fs; gyp

,Ue;j NghjpYk;> kpfTk; Kf;fpakhf ,e;j ,Wjpg; Nghupd; NghJ fzprkhd msT nghJkf;fs; ,og;G Vw;gl;lij ,e;j mwpf;if xg;Gf;nfhz;Ls;sJ.

mg;ghtp kf;fis gaq;futhjpfspd; gpbapy; ,Ue;J kPl;gjw;fhd kdpjhgpkhd eltbf;ifahf ,yq;if murhq;fj;jhy; tpgupf;fg;gl;Lte;j ,e;jg; Nghupy;> fzprkhd nghJkf;fs; ,og;G Vw;gl;lij ,yq;if murhq;fj;jpdhy; cUthf;fg;gl;l xU Mizf;FO xg;Gf;nfhs;tJ ,Jjhd; Kjw;jlitahFk;.

mj;Jld; tpLjiyg; Gypfs;jhd; kf;fis kdpjf; Nflaq;fshf gad;gLj;jpajhfTk; Mizf;FOtpd; mwpf;if njuptpf;fpd;wJ.

mNj Neuk; ,uhZtk; nghJkf;fs; ,Ue;j gFjpfs; kPJ n\y; jhf;Fjy;fis elj;jpajhff; $wg;gLk; Fwpg;gpl;l Fw;wr;rhl;Lf;fs; njhlu;ghfTk;> Nghupd; ,Wjp fl;lj;jpy; ruzile;j tpLjiyg; Gypfs; mjd; gpwF fhzky; Nghdjhff; $wg;gLk; Fw;wr;rhl;Lfs; Fwpj;Jk; tprhuizfs; elj;jg;gl Ntz;Lk; vd;Wk; Mizf;FO gupe;Jiu nra;Js;sJ.

Nghu;f; Fw;wk; Fwpj;J ru;tNjr mstpy; mOj;jq;fs; mjpfkhdij mLj;Nj fle;j Mz;L ,yq;if muR ,e;j tprhuizf; FOit mikj;jJ.

Kd;dzp rl;l epGzuhd rp Mu;. b rpy;th jiyikapyhd ,f; FOtpdu; ehL KOtJk; gy mku;Tfis elj;jp kf;fsplk; Neubahf tpguq;fisf; Nfl;lwpe;jdu;. tpLjiyg; Gypfs; ,af;fj;jpd; Kf;fpaj; jiytu;fspd; cwtpdu;fs; cs;spl;l gyu; ,e;j Mizf;FO Kd;ghf rhl;rpaq;fis toq;fpapUe;jdu;.

,Ue;Jk; ,e;j Mizf;FOtpd; mjpfhu tuk;G kw;Wk; ,jd; gad; Fwpj;J vOe;j Iag;ghLfs; fhuzkhf mk;nd];l;b ,d;lu;Ne\dy;> {`kd; iul;]; thl;r; cs;spl;l kdpj cupik mikg;Gf;fs; ,e;j Mizf;FOtpd; mku;tpy; gq;F nfhs;s kWj;Jtpl;ld.

,yq;if murhq;fj;jpd; ,uhZt Af;jpfs; kpfTk; ftdkhf jpl;lkplg;gl;bUe;jjhfTk;> mjpy; nghJkf;fspd; ghJfhg;Gf;Nf Kf;fpaj;Jtk; toq;fg;gl;bUe;jjhy;> nghJkf;fs; ,og;ig jtpu;g;gJ my;yJ Fiwg;gij me;j Af;jpfs; ikakhff; nfhz;bUe;jjhfTk; Mizf;FOtpd; mwpf;if Fwpg;gpl;Ls;sJ.

nghJkf;fs; ,og;ig jtpu;g;gjw;fhf ,yq;if ,uhZtj;jpd; eltbf;iffs; Ntz;Lnkd;Nw kpfTk; jhkjg;gLj;jg;gl;ljhfTk; me;j mwpf;if $WfpwJ.

vg;gbapUe;j NghjpYk; rpy jUzq;fspy; gyg;gpuNahfk; msTf;F mjpfkhf ,Ue;jjhfTk;> mit Fwpj;J Nkyjpf Gyd; tprhuizfs; Njit vd;Wk; me;j Mizf;FO $wpAs;sJ.

msTf;F mjpfkhd jhf;Fjy;

mjhtJ tpLjiyg;Gypfs; nghJkf;fs; kj;jpapy; ,Ue;J jhf;Fjy; elj;jpa fhuzj;jhy;> mjw;fhd ,yq;if ,uhZtj;jpd; gjpy; jhf;Fjy;fs; rpy Ntisfspy; msTf;F mjpfkhf ,Ue;jpUf;fyhk; vd;Wk;> mit Fwpj;J tprhupf;fg;gl Ntz;Lk; vd;Wk; mJ $Wfpd;wJ. me;jj; jhf;Fjy;fs; Njitf;F msthdjhf ,Ue;jjh vd;gJ Fwpj;J Muhag;gl Ntz;Lk; vd;Wk; mJ $WfpwJ.

,e;j tplaj;jpy; ,uhZtj;jpd; nghJthd ew;ngaUf;F fsq;fk; Vw;gLtij jtpu;g;gjw;fhf> Fw;wq;fhzg;gLk; ,yq;if ,uhZtr; rpg;gha;fSf;F cupa jz;lid toq;fg;gl Ntz;Lk; vd;Wk; mJ gupe;Jiuj;Js;sJ. mNjNtis ghjpf;fg;gl;ltu;fspd; neUq;fpa cwtpdu;fSf;F cupa el;l

kUj;Jtkid kPjhd jhf;Fjy;

Nghu; Ntisapy; kUj;Jtkidfs; kPJ vwpfizj; jhf;Fjy; elj;jg;gl;ljhff; $wg;gLk; ru;r;irf;Fupa tptfhuk; Fwpj;J jdJ fUjj;ijf; $wpAs;s ey;ypzf;f Mizf;FO> kUj;Jtkidfs; kPJ vwpfizj; jhf;Fjy;fs; elj;jg;gl;bUf;fpd;w NghjpYk;> me;jj; jhf;Fjiy ahu; elj;jpdhu;fs; vd;W KbTf;F tUtJ fbdk; vd;W $wpAs;sJ.

tpLjiyg;Gypfs; mikg;G cWg;gpdu; xUtupd; rhl;rpapd;gb> tpLjiyg;Gypfs; GJkhj;jsd; kUj;Jtkid kPJ jhf;Fjy; elj;jptpl;L mjw;fhd kd;dpg;G NfhupajhfTk; Mizf;FO xU rk;gtj;ij Rl;bf; fhl;bAs;sJ.

Nghu;r; rl;lq;fspy; khw;wk; Njit

ru;tNjr Nghu;r; rl;lq;fs; Fwpj;J jdJ gupe;Jiuapy; Fwpg;gpl;Ls;s ey;ypzf;f Mizf;FO> jw;Nghija ru;tNjr kdpj cupikr; rl;lq;fs;> murhq;fq;fSf;Fk;> murhq;fk; my;yhj Nghuhl;lf; FOf;fSf;Fk; ,ilapyhd Nghu;fSf;F cfe;j tifapy; kWrPuikf;fg;gl Ntz;Lk; vd;W Fwpg;gpl;Ls;sJ. murhq;fk; my;yhj FOf;fs; ve;j tpjkhd tpjpfisAk; gpd;gw;whj fhuzj;jhy;> mjw;Nfw;wthW ru;tNjr rl;lq;fis khw;WtJ njhlu;gpy; ru;tNjr r%fk; eltbf;iffis vLf;f Ntz;Lk; vd;Wk; mJ $wpAs;sJ.

kUe;Jg; gw;whf;Fiw

nghJkf;fs; jQ;rkiltjw;fhf mwptpf;fg;gl;l jhf;Fjy; R+dpag; gpuNjrq;fspy; NghJkhd kUe;J kw;Wk; czTg;nghUl;fspd; tpepNahfk; ,Uf;ftpy;iy vd;w Fw;wr;rhl;L Fwpj;J fUj;Jf; $wpAs;s Mizf;FO> murhq;fk; NghJkhd tpepNahfj;ij mq;F mDg;gpa NghjpYk;> mtw;wpy; xU gFjpia tpLjiyg;Gypfs; gwpj;Jf;nfhz;L tpl;ljhf $wpAs;sJ. ,Ue;j NghjpYk;> mq;F kUe;Jg;nghUl;fspd; tpepNahfk; NghJkhdjhf ,y;iy vd;W mJ xg;Gf;nfhz;Ls;sJ.

fhzhky; Nghdtu;fSf;fhd rpwg;G Mizf;FO

murhq;fg; gilfs; ey;y Kd;Djhuz mbg;gilapy; nraw;gl;l NghjpYk;> mq;F ngUkstpyhd fhzky;Nghjy;fs;> flj;jg;gLjy; kw;Wk; rl;l tpNuhj jLj;J itg;Gf;fs; ,lk;ngw;Ws;sjhf Mizf;FO Rl;bf;fhl;bAs;sJ. ,it Fwpj;J tprhupf;f fhzhky;Nghdtu;fSf;fhd xU rpwg;G Mizf;FO mikf;fg;g;gl;L> R+j;jpujhupfs; jz;bf;fg;gl Ntz;Lk; vd;Wk; mJ $wpAs;sJ.

,e;j tptfhuq;fs; njhlu;gpy; rhl;rpakspj;j rpyu; < gp b gp> fUzh FO> jkpo; kf;fs; tpLjiyg;Gypfs; Mfpa mikg;Gf;fs; kPJ Ml;fs; flj;jg;gl;lik Fwpj;J Gfhu; nra;Js;sjhfTk;. Mdhy;> me;j mikg;Gf;fs; mtw;iw kWj;Js;sjhfTk; $wpAs;s Mizf;FOtpd; mwpf;if> rl;l tpNuhj MAjf;FOf;fs; Fwpj;j Nkyjpf tprhuizfs; Njit vd;Wk; Fwpg;gpl;Ls;sJ.

fhzhky; Nghdtu;fis fz;Lgpbg;gjw;fhd eltbf;iffis murhq;fk; vLf;f Ntz;Lk; vd;Wk;> gaq;futjhj; jLg;Gr; rl;lj;jpd; fPo; ePjpkd;wq;fspy; Fw;wQ;Rkj;jg;glhky;> gy tUlq;fshf jLj;J itf;fg;gl;bUg;gtu;fspd; tptfhuq;fis Muha RahjPd MNyhridf;FO xd;W epakpf;fg;gl Ntz;Lk; vd;Wk; Mizf;FO gupe;Jiuj;Js;sJ.

gpupl;ldpd; rhdy; 4 njhiyf;fhl;rpahy; ntspaplg;gl;l ,yq;ifapd; nfhiyf;fsk; tptuzg;glj;jpd; ek;gfj;jd;ik Fwpj;J Mizf;FO Nfs;tp vOg;gpAs;sJ.

,uhZt jiyaPL

tlkhfhzj;jpy; rptpy; epu;thf eltbf;iffspy; ,uhZtk; jiyaPL nra;tjhf mbf;fb tUk; Fw;wr;rhl;Lf;fs; Fwpj;J fUj;Jf; $wpAs;s Mizf;FO> rptpy; eltbf;iffspy; ,uhZtj; jiyaPL ,y;yhJ nra;ag;gl Ntz;Lk; vd;W gupe;Jiuj;Js;sJ.

mjpfhug; gfpu;T Njit

jkpo; kf;fs; kj;jpapy; fhzg;gLk; jw;Nghija ''td;nray;fs;> re;Njfq;fs;> jhk; ghugl;rkhf elj;jg;gLtjhd czu;T'' Mfpatw;iw ePf;f> kf;fis ikakhff; nfhz;l mjpfhug; gfpu;T Kiwik xd;W nfhz;Ltug;gl;L> mjd; %yk; cs;Suhl;rp rigfs; gyg;gLj;jg;gLtJld;> jw;Nghija khfhz rigfs; Kiw jpUj;jg;gl;L> kj;jpapy; mjpfhuk; gfpug;gl Ntz;Lk; vd;Wk; ey;ypzf;f Mizf;FO gupe;Jiuj;Js;sJ.

ntspAyFf;F ntspg;gilahfj; njupAk; tifapy; mjpfhuq;fs; gutyhf;fg;gLjypy; Kd;Ndw;wk; fhzg;gl Ntz;Lk; vd;Wk; mJ Fwpg;gpl;Ls;sJ.

ed;wp- gp.gp.rp

08 December 2011

ஆக்கிரமிக்கப்படும் மக்கள் நிலங்கள் -”தேசியத் தலைமைகளுக்கு” பகிரங்க வேண்டுகோள்

நீங்கள் நேசிப்பதாகக் அடிக்கடி கூறிக்கொள்ளும் மக்கள் இப்போது போராட ஆரம்பித்துவிட்டார்கள். நீங்கள் உயிரையும் துறக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் மண் ஆக்கிரமிக்கப் படுவதற்கு எதிராக கொலைக் களத்தில் நின்று மக்கள் போராடுகிறார்கள். பல ஆயிரங்களை கொட்டி நீங்கள் நிகழ்த்திய மாவீரர் தினத்தின் அலங்காரங்கள் கலைவதற்கு முன்பாகவே மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய்க் கொன்று குவிக்கப்பட்ட மண்ணின் ஒவ்வொரு அங்குலத்தையும் பேரினவாத அரசு திட்டமிட்டுச் சூறையாடுகிறது. வன்னி பெரு நிலம் என்று நீங்கள் பெருமையடித்துக்கொண்ட மண்ணின் 30 வீதத்தை ஆக்கிரமித்தாகிவிட்டது.

மூதூர், சம்பூர், அம்பாறை என்று கிழக்கு மாகாணத்தின் நிலம் பல்தேசியக் கம்பனிகளின் வியாபரப் பசிக்கும் சிங்கள பௌத்த இனவாத வெறிக்கும் இரையாக்கப்படுகின்றது. நிங்கள் பேச்சு நடத்திப் புழகாங்கிதம்டையும் அமரிக்கக் கம்பனிகள், ஐரோப்பிய நிறுவனங்கள், இந்திய வியாபாரிகள் எல்லோரும் கோரப்பற்களோடு மக்கள் குடியிருப்புக்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். பேரினவாதிகளும் பல்தேசிய நிறுவனங்களும் இணைந்தே இந்த ஆக்கிரமிப்பை நடத்துகிறார்கள். இராணுவக் குடியிருப்புகளும், பல்தேசியக் கம்பனிகளும் அருகருகே “பாதுகாப்பாக” பக்கத்துவீட்டுக் காரர்களாக மாறிவருகிறார்கள். இதற்கு புலம் பெயர் வியாபாரிகள் தம்மையும் நுளைத்துக்கொண்டு கொள்ளையடிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

எந்த மக்களுக்கு “உதவிசெய்வதாக” புலம்பெயர் நாடுகளில் நீங்கள் பணம் சேர்த்துக்கொண்டீர்களோ அந்த மக்கள் தெருவோரங்களில் அனாதைகளாக, அடிமைகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். பட்டினிச் சாவை எதிர் நோக்குகிறார்கள். பசியின் கொடுமையால் உடலை விற்கக்கூடத் தயாராக ஒரு வறிய மக்கள் கூட்டம் உருவாக்கப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் அமரிக்காவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு ‘கலாச்சாரம் சீரழிகிறது’ என்ற உங்கள் கூக்குரல்கள் நாரசமாக ஒலிக்கிறது.

யாழ். மாதகல் கிராமத்தினை கடற்படையினர் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்களால் பேரணியும் மகஜர் கையளிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 05.12.2011 திங்கட்கிழமை முற்பகல் சண்டிலிப்பாய் அந்தோனியார் தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியாக பிரதேச சபைச் செயலகத்தினைச் சென்றடைந்த மக்கள் பிரதேச சபைச் செயலரிடம் மனுவை கையளித்துள்ளனர். மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இன்று பேரணி இடம்பெறுவதை அறிந்து கொண்ட இராணுவத்தினரும் பொலிஸாரும் குறித்த பகுதிகளில் பெருமளவில் குவிக்கப்பட்டு வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

நாடுகடந்த தமிழீழ கனவான்கள் தமது அடையாள அட்டை வியாபாரத்தைத் தீவிரப்படுத்த ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரச கைக்கூலி கே.பிக்கும் குறுந்தேசியத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர். தமிழர் பேரவைகள் சோனியா காந்தியைத் தேடிக்கொண்டிருப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலையிலிருந்து மேற்கே திரும்பி ரோபேர் ஓ பிளேக்கை நோக்கித் தேவாரம் பாடிக்கொண்டிருப்பார்கள்.

இந்தியப் பழங்குடி மக்கள் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி வெற்றிபெறுகிறார்கள். நாளுக்கு நாள் குவிக்கப்படும் இராணுவத்தை புறமுதுகு காட்டி ஓடச் செய்கிறார்கள். நீங்கள் நம்பியிருக்கும் மனித கசாப்புக்கடைக் காரர்களிடம் அவர்கள் மண்டியிட்டுத் தம்மைக் காப்பாற்றும் படி இரஞ்சவில்லை. நீங்கள் அமரிக்காவிடமும், இந்தியாவிடமும், ஐரோப்பாவிடமும் உங்கள் கனவான்களின் உடைகளோடு மண்டியிடுவது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாமில்லை. அப்படித் தெரிரிந்துகொண்டால் உங்களைக் கேலிச்சித்திரங்களாக வரைந்திருப்பார்கள்.

மாவீரர்தினம் நடத்தி மகிழந்தாகிவிட்டது. இனிமேல் பாலசிங்கத்திற்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தி அகமகிழ ஆயத்தமாகிவிடுவீர்கள். மக்களை மட்டும் மறந்துவிடுவீர்கள். இதுவரைக்கும் இலங்கையில் மக்கள் போராடுகின்ற போது எங்காவது மூலையில் நின்றாவது குரல் கொடுத்தீர்களா? இப்போது இன்னொரு சந்தர்ப்பம். என்ன செய்வதாக உத்தேசம்? நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இன்னும் சில வருடங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் செறிவாக வாழ்ந்த பிரதேசங்கள் இருந்ததாக புத்தகங்களில் மட்டுமே படித்தறியக் கூடிய நிலைமை உருவாகும். நிலத்தை ஆக்கிரமிக்கும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கொலைகாரர்களுக்கு எதிராகவும் பல் தேசிய முதலைகளுக்கு எதிராகவும் தெருவில் இறங்கிப் போராட நீங்கள் தயாரா?

வீரம் செறிந்த போராட்டத்தின் பங்குதாரர்கள் என்று கூறி பணம் கேட்க வரும் நீங்கள் இப்போது உங்கள் வீரத்தோடு இலங்கை இந்தியத் தூதரகங்களின் முன்னாலும், பல்தேசிய ஆக்கிரமிப்பாளர்களின் முன்னாலும் அணிதிரண்டு போராடத் தயாரா? அல்லது போராடும் மக்களை அனாதைகளாகத் தெருக்களில் அலையவிட்டுவிட்டு ஐந்து நட்சத்திர விடுதிகளில் மனிதக் கசாப்புக்கடைக் காரர்களோடு விருந்துண்டு களிக்கப்போகிறீர்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பினால் சில வேளைகளில் தெரிந்து கொள்வார்கள் தங்களுக்கு வாக்களித்த மக்கள் போராடுகிறார்கள் என்று. ஒற்றுமை ஒற்றுமை என்று நீங்கள் போட்ட ஓலத்தில் அழிக்கப்படுக்கொண்டுருக்கும் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீங்கள் தயாரானால் ஒற்றுமை தானாக உருவாகும்; சந்தர்பவாதிகள் தொலைந்து போய்விடுவார்கள்.
என்ன செய்யப்போகிறீர்கள்? போராடத் தாயரா??

(நன்றி: இனியொரு)

இன உரிமைகளுக்கும் நல்லுறவிற்குமான தேடல்

- தி.ஸ்ரீதரன், பத்மநாபா ஈபிஆர்எல்எப்

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வு என்பது பழங்கதையாகி வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு பேரினவாத அரசியலின் இழுத்தடிப்பு மாத்திரமல்ல, தமிழ் தலைமைத்துவங்களின் அலட்சிய மனோபாவமும் காரணமாகும்.

அமெரிக்காவில் பேசுகிறோம். இங்கிலாந்தில் பேசுகிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளுரில் நடைமுறை சார்ந்த செயற்பாடுகளில் அக்கறை காட்டாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தாம் அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளுக்கும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எமது பிரச்சினை பற்றி விரிவாக எடுத்துரைத்தாகவும்,

அதேபோல் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பேசியது, கேள்விகளுக்கு பதிலளித்தது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

நல்ல விடயம்! ஆனால் பிரச்சினை இலங்கையில் தீர வேண்டும். அதற்கு உள்நாட்டில் மற்றும் உப கண்ட பிராந்திய மட்டத்திலேயே முயற்சிகள் பிரதானமாக தேவைப்படுகின்றன.

உள்ளுரில் மக்களின் அன்றாட அவலங்கள், துயரங்கள், நெருக்கடிகள் இவற்றுக்கான தீர்வுகள் பற்றி உள்ளுர் சக்திகளை வழிக்குக் கொண்டுவரும் முயற்சிகள் பிரதானமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

முதலாவது தமிழ் முஸ்லீம், மலையக அரசியல் சக்திகளிடையே புரிதல் வேண்டும்.

இரண்டாவது சிங்களவர்களிடையே அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான சக்திகளுடன் கலந்துரையாட வேண்டும் ஒருங்கிணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஊக்கப்படுத்துதல் தெற்கில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அது அவர்கள் பாடு என விட்டுவிட முடியாது. அங்கு மாற்றம் நிகழாமல் தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றம் நிகழாது.

அந்த மாற்றத்தை நிகழ்த்துவதற்கு நாமும் முயல வேண்டும்.

இராணுவ மயமாக்கல் ,பலவீனமடைந்துவரும் ஜனநாயகம் ,பொலிஸ் ஆட்சி போன்ற நிலைமைகள் தென்னிலங்கையில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.

ஊடக சுதந்திரம் ஜனநாயக மயப்பட்ட வாழ்க்கையின் தேவை தெற்கிலும் உணரப்படுகிறது.

எனவே தென்பகுதி மக்களின் மனங்களை வென்றெடுப்பது எமது பிரச்சினை தீர்வின் பிரதான அம்சம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இலங்கை ஜனநாயக மயப்பட்டால்தான் எமது வாழ்வும் ஜனநாயக மயப்படும். தமிழ் மக்களின் வாழ்வு ஜனநாயக மயப்பட்டால்தான் இலங்கை ஜனநாயக மயப்படும். இந்த இயக்கவியல் தொடர்பு விளங்கிக் கொள்ளப்படல் வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி என்பதும் அவ்வாறுதான்.

இனவாத அரசியல் இருக்கும் வரை, உற்பத்தியில் சம்பந்தமில்லாத இராணுவ மயமாக்கல் இருக்கும் வரை, மக்களின் சுதந்திர சிந்தனைக்கு தடைபோடும் கொடூர சட்டங்கள் இருக்கும் வரை பொருளாதார சமூக அபிவிருத்தி என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

அந்தந்த சமூகங்களின் தனித்துவங்கள் ,நம்பிக்கைகள், அனுபவங்கள், கலாச்சாரம், மொழி என்பன மதிக்கப்படல் வேண்டும். அனுசரிக்கப்படல் வேண்டும்

சமூக முன்னேற்றத்திற்கு தடையில்லாத அனைத்து தனித்துவங்களும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

தனி நபர் சுதந்திரமும் அவ்வாறுதான்.

தனி மனிதனை நடைப்பிணமாக்கி ஒரு நாடு முன்னேற முடியாது. அது தூங்கி வழிகின்றதாகவும் , ஊழல் மிகுந்ததாகும். கொலை கொள்ளைகளின் நிரந்தர இருப்பிடமாகவும் மாறிவிடும்.

இங்குதான் சுதந்திரம் ,சமத்துவம், சகோதரத்துவம் என்ற பிரெஞ்சுப் புரட்சியின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றன.

சுதந்திரம் என்பது எல்லாவற்றையும் விட பெரிய விடயம். எகிப்திலும், டூனீசியாவிலும் ,யேமனிலும் ,மியன்மாரிலும் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் கிளர்ச்சிகள் அதனைத்தான் உணர்த்துகின்றன.

சமூக- பொருளாதார -அரசியல் சுதந்திரம் என்பதன் விரிவான அர்த்;தத்திற்கு செல்வோமானால் ஏதென்ஸ்ஸிலும் வோல் ஸ்ரீட்டிலும் நடப்பவையும் சுதந்திரத்திற்கானவைதான்.

மக்களின் அரசியல் பொருளாதார சமூக சுதந்திரத்திற்கான எழுச்சிகள் உலகின் பல்வேறு நகரங்களில் நிகழ்கின்றன.

இராணுவ மயமான மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்களும், சரி பெருவாரியான மக்களை சுரண்டி ஏப்பம் விட்டு ஐஸ்வரியங்களை அனுபவிக்கும் உலகளாவிய பல்தேசிய பெரு முதலாளி வர்க்கமும் அவற்றின் முகவரான அரசுகளும் சரி தமது நலன்களை விட்டுக்கொடாது. தானாக திருந்தாது.

இந்த உலகம் அழியப் போகிறது எதுவும் மிஞ்சாது என்ற நிலையிலும் சரி அது திருந்தாது

உலகளாவிய மனித உரிமை அமைப்புக்களும் சரி, ஊடகங்களும் சரி ஒரு வரையறைக்குள்தான் மக்களின் ஜனநாயகம், சுதந்திரத்தை பற்றி பேசுகின்றன.

தாம் சார்ந்து நிற்கும் பல்தேசிய பெரு முதலாளிகளின் நலன்களுக்கு எதிராக அவை அதிகம் பேசப்போவதில்லை.

அரசு சார்பற்ற நிறுவனங்கள் என்று சொல்லப்படுகின்றவையும் பெரும்பாலும் அவ்வாறுதான்.

இத்தகைய சூழ்நிலையில் வறிய நாடுகள் ,மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படுபவற்றில் மத ,இனவாத போதைகளை ஏற்றி மிலேச்சத்தனமான ஆட்சி முறைகள் உருவாகின்றன. இதற்கு சட்டங்களோ நெறிமுறைகளோ தேவையில்லை.

இத்தகைய போக்கை நாம் உலகலாவிய அளவில் பரவலாக அவதானிக்க முடியும்.

எங்கு மக்களின் வாழ்வு ஜனநாயக மயப்படுத்தப்படுகிறதோ அந்த நாடு முன்னேற்றப்பாதையில் செலல முடியும்.

இலங்கையில் அது அதிகாரப்பகிர்வின் ஊடாக ,ஒட்டு மொத்த இலங்கையின் வாழ்வும் ஜனநாயக மயப்படுத்துவதன் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதற்கு சர்வதேச அளவில் சௌகரியமான சுலபமான வழியில் ஈடுபட்டு மட்டும் சரிபட்டு வராது தகிக்கும் உள்ளுர் மக்கள் சார்ந்த வேதனைகள் உணரப்படல் வேண்டும். உள்நாட்டு மட்டத்தில் பிராந்திய மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்களிடையே கசப்புணர்வுகளை விதைக்காத குரோதத்தை ஏற்படுத்தாத நம்பிக்கைகளின் ஊடாகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்காக அண்டை நாட்டிலிருந்து பல்வேறு அனுபவங்களை நாம் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அது மிகப் பெறுமதி வாய்ந்தது.

பல்லினங்களின் ஜனநாயக நாடாக இலங்கையின் இருத்தல் முதன்மையானது.

நாம் அங்கிருந்தே தொடங்க வேண்டும்.

இலங்கையின் தலைவர்கள் இது பற்றி காழ்புணர்வின்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.

தமிழர்களின் பிரச்சினை புலம் பெயர்ந்த ஒரு பகுதியினரின் பொழுது போக்காவதால் உள்நாட்டில் நெருக்கடிகள் அதிகரிக்கின்றன.

நடைமுறைக்கு ஒவ்வாத முறையில் தமது விருப்பங்களுக்கேற்ப அவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி பேசி வருகிறார்கள்.

அவர்களுடைய புலம் பெயர் இருப்பின் அடிப்படையிலேயே அவர்கள் பிரச்சினையை அனுகுகிறார்கள்.

தமது நலன்களுக்காக இலங்கையில் தமிழர்களின் அரசியல் மீது செல்வாக்கு செலுத்த முனைகிறார்கள்.

இதனால் சமூகத்தினுள் இடைவெளி அதிகரித்துச் செல்கிறது. எமக்கு நாமே எதிரிகள் என்ற நிலை தோற்றுவிக்கப்படுகிறது. இன்று தமிழர்களுக்கு நிற்பதற்கோர் இடம் வேண்டும். அந்த இடம் சொந்த நாட்டில் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவுகிறது. இதனையே இந்தச் சக்திகள் விரும்புகின்றன.

எது எமது சமூகத்துக்கு சிறப்பானதோ அதனை செய்ய முயல்வோம்.

தி.ஸ்ரீதரன்

பத்மநாபா ஈபிஆர்எல்எப்

03 November 2011

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

(சானக ரூபசிங்க)


மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம்.

எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.

மன்னாரிலிருந்து பூநகரி நோக்கிச் செல்லும் பாதையில் முன்னேறிச் செல்லும்போது யுத்தத்தினால் உண்டான கஷ்டங்கள், துயரங்கள் விரக்தி என்பன கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் தோன்றுவதற்கும் உணர்வதற்கும் தலைப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யுத்தகாலத்தில் கட்டப்பட்ட உறுதியான மண் மதில்களைத் தாண்டிச் சென்று நெற்களஞ்சியப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தேன். இந்தக் கட்டுரையை பயண ஆரம்பத்தில் அனுபவித்த துயர்மிக்க அனுபவமொன்றினைக் கொண்டு ஆரம்பிக்க நினைக்கிறேன். அந் நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிவிட்டு திரும்ப வீடு நோக்கி, மரம் செடி கொடியேதுமற்ற மணல் வீதியின் நெடுகே தகிக்கும் கடுமையான வெயிலில் வெந்து வெந்து, சுமார் பதினெட்டு கிலோமீற்றர்கள் நடந்தே சென்று கொண்டிருந்த நான்கு சிறுமிகளை அன்று நான் சந்தித்தேன். அவர்கள் பரீட்சைக்காக வந்திருந்ததுவும் அவ்வாறேதான்.

நான் அறிந்திராத பிரதேசமொன்றில், தெரியாத மொழி பேசும், முன்னெப்போதும் அறிந்திராத மக்களுடன் கழித்த முதல் நாளிலேயே வேறொரு நாடொன்றில் இருப்பதைப் போன்ற உணர்வை உணர்ந்தேன். எனினும் இரண்டு நாட்கள் கழிந்த பிற்பாடு அப் பிரதேச மக்களுடன் நெருக்கமாகிவிட என்னால் முடிந்தது. அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவுண்டேன். அவர்களது அன்றாட வேலைகளில் ஒத்தாசை புரிந்தேன். சிறு குழந்தைகளுடன் விளையாடினேன். அவர்களுக்கு சிற்சில விடயங்களைக் கற்றுக் கொடுத்தேன். அதற்கிடையில் அவர்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ள முயற்சித்தேன்.

யுத்தத்தினால் உடைந்து சிதிலமாகிப் போன வீடுகள், கட்டடங்கள், போக்குவரத்துப் பாதைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அடிப்படை வசதிகளை சிரமப்பட்டாவது பெற்றுக்கொள்ளும் வசதி அவர்களுக்கில்லை. மின்சாரம் எப்படிப் போனாலும், சுத்தமான குடிநீர், பயணங்களுக்காக பேரூந்தொன்று கூட அங்கில்லை. ஐநூறு ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாய் மாத்திரமே கொடுத்துச் செல்லும் பலம் வாய்ந்த குழுவொன்று அப் பிரதேசத்தில் சஞ்சரிப்பதை நானே கண்டிருக்கிறேன். விவசாயத்துக்கேற்ற வயல்நிலங்கள் காணுமிடங்களிலெல்லாம் இருந்தபோதிலும், அவை பாழடைந்து போயிருக்கின்றன. விவசாயம் செய்யப்படும் ஒன்றிரண்டு வயல்களுக்கும் உதவியாக டிரக்டர் வண்டியொன்றேனும் வழங்கியிருப்பது அரச சார்பற்ற நிறுவனங்கள்தான். பாடசாலைகள், வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் சிக்கல் என்னவெனில், அவற்றைச் செய்வது அரசாங்கத்தினாலா அல்லது வேறு அமைப்புக்களாலா என்பதுதான். தேசப்பற்று மிக்கவர்களெனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் கிளர்ச்சிக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமொன்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் பேயாட்டம் ஆடி, சாகும்வரை எனக் கூறிக் கொண்டு உண்ணாவிரதமிருந்து அரச சார்பற்ற அமைப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனத் துடிக்கும் ஜோக்கர் வங்ச (இது விமல் வீரவங்சவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்) அரசைச் சார்ந்தவர்கள் செய்வது அடிக்கல் நாட்டுவதுவும், வேறு அமைப்பொன்று செய்த ஏதேனுமொன்றை திறந்துவைப்பதுவும்தான். இல்லாவிடில், முன்பு சொன்ன அமைப்புக்களுக்கு ஏதும் செய்யவிடாமல் தடுப்பதுவும்தான்.

இங்கு வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதொரு விடயத்தை நான் கண்டேன். அதாவது வளர்ச்சி இருப்பது நீங்கள் போகும் வரும் பிரதான வீதிகளில் மட்டும்தான். அனேகமான பகுதிகளில் மக்களது வாழ்க்கை முன்புபோலவேதான். இல்லாதது குண்டுகளின் ஓசை மட்டுமே. காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக? இன்னுமின்னும் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது எதற்காக?

இங்கு விதவைகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு அனேகக் குழந்தைகளும் உள்ளன. இங்கு ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருக்கின்றனர். ஆண்களில் சிலர் இறந்துபோய் விட்டனர். சிலரை இரண்டாண்டு காலமாக இராணுவம் கைது செய்து வைத்திருக்கிறது. சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் இங்குள்ள பெண்களுடன் இணைந்து பெரியதொரு குடும்பமான பின்பு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இப் பிரதேசத்தில் ஆண்களின் எண்ணிக்கைக் குறைபாடு காரணமாக குடும்பங்களின் அனைத்துப் பொறுப்புக்களும் பெண்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன.

இம் மக்களுக்கு தெற்கில் நடப்பதென்ன என்பது குறித்து எதுவும் தெரியாது. இவர்களுக்கு ராஜபக்ஷவோ, விக்கிரமசிங்கவோ, பொன்சேகாவோ, சம்பந்தனோ வீரனோ துரோகியோ அல்ல. இவர்களைப் பொருத்தவரையில் இவர்கள் எல்லோருமே சம்பிரதாயபூர்வமான பொய்காரர்கள். அரசாங்கம் குறித்த நிலைப்பாடும் அதுவேதான். எனினும் இவர்களது பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்வது அரச சார்பற்ற அமைப்புக்கள்தான் என்பதனால் இவர்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களைக் குறித்து ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.

தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் மக்களுக்கு வடக்கு மக்கள் கண்காட்சிப் பொருட்களாக மாறியுள்ளனர். உடைந்து சிதைந்துபோன பெருவீதிகள், வீடுகள் மற்றும் கட்டடங்களைப் பார்த்தபடி தெற்கு மக்கள் பொழுதைப் போக்குகிறார்கள். சொற்ப அளவினரைத் தவிர அனேகம் பேர் எண்ணியிருப்பது யுத்தம் முடிவுற்றதன் பின்னர் எல்லாம் முடிவுற்று விட்டது எனத்தான். ஆனால் உண்மை அதுவா? இல்லை. சுனாமி வருவதற்கு முன்னர் முழுச் சூழலுமே அமைதியானது பற்றி இன்னும் எங்களுக்கு நினைவில்லை. நீண்ட அமைதி என்பது பெரும் அழிவு அண்மையில் என்பதுதான். நாட்டில் எல்லோராலுமே சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் கதைக்க முடியுமாகும்போது இந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென எண்ணும் சிலரும் இருக்கிறார்கள். அவ்வாறானது அபத்தம் அன்றி வேறு இல்லை. உடனடித்தேவையாக இருப்பது தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நியாயமானதொரு தீர்வை விரைவில் பெற்றுக் கொடுப்பதே.

விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தத்தில் தோல்வி கண்டிருக்கிறது. அத் தோல்வி அனைத்து தமிழ் மக்களினதும் தோல்வியென்ற எண்ணக் கருத்தொன்று உருவாக்கப்பட்டு அது மக்களிடையே ஆழப் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் தோல்வி மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள். தமிழ் மக்களின் உள்ளங்களுக்குள் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பொன்றையோ நம்பிக்கையொன்றையோ உருவாக்க இன்றுவரைக்கும் முடியவில்லை. இதனால் பெரும் சிக்கலொன்று இருப்பது குறித்து பொறுப்பானவர்களுக்கு புரியாமலிருப்பதும் ஏனோ?

யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் முளைக்க மாட்டாதென யாரால் கூறவியலும்? இதைப் பற்றிச் சிந்தித்தபடி பதினெட்டாம் திகதி நெற்களஞ்சியப் பிரதேசங்களிலிருந்து மீண்டும் திரும்பி வந்தேன்.

சிங்களத்திலிருந்து தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி- சூத்திரம் இணையம்

17 October 2011

பல்கலைகழக மாணவர் அவைத்தலைவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்- தி. ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்


யாழ் பல்கலைகழக மாணவர் அவைத்தலைவர் தவபாலசிங்கம் மீது கந்தர்மடத்தில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதலை பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் மீது அடிக்கடி நடைபெறுகின்றன. மக்கள் பீதி நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். நாவாந்துறை தாக்குதல், உதயன் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்போது பல்கலைகழக மாணவர் தலைவர் மீதான தாக்குதல் என்பன வடக்கு கிழக்கில் ஜனநாயக இடைவெளி இல்லாதொழிக்கப்பட்டு வருவதையே காட்டுகிறது.

இந்த அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனநாயகம், மனித உரிமை சட்டத்தின் ஆட்சி என்பவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பல்கலைகழகத்தின் சுயாதீனம் மாணவர் ஆசிரியர்களின் உரிமைகள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சுயாதீனமான நீதி விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் பகிரங்கப்படுத்தப்படுவதும் தண்டனை வழங்குவதும் முன்னுரிமை பெறுகின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

16 October 2011

பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு காத்திரமான விடயங்களை முன்வைக்க வேண்டும்- முன்னாள் நீதியரசர்

அரசுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழர் தரப்பு விடயங்களைப் பட்டியலிட்டு அதன் அடிப்படையில் குறித்த காலப் பகுதிக்குள் பேச்சை நிறைவுசெய்யும் விதத்தில் திட்டமிட வேண்டும். என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் அரசாங்கங்கள் பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால், பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.

1921 ஆம் ஆண்டுதான் உள்ளூர் வாசிகளுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினார்கள். அதுவரை இன ரீதியான தனி அலகுகள் தான் இருந்தன. இனக் குழுமங்களின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் ஆங்கிலேயர்கள் இன அடிப்படையில் வைத்திருந்தார்கள். 1917 ஆம் ஆண்டு பிரதேச முறைப்படி அது அமைய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை அப்போது சபாபதி தலைமையிலான யாழ்ப்பாண சங்கம் எதிர்த்தது. பிரதேச ரீதியில் இருந்தால் பெரும்பான்மை இனத்தவர்கள் கூடுதல் பலம் பெற்று விடுவார்கள். சிறுபான்மை இனத்தவர்களைக் கணக்கிலெடுக்க மாட்டார்கள் என்று வாதிட்டார்கள். ஆனால் தமிழர்களுக்குக் கொழும்பில் ஓர் ஆசனம் தருவோம் என்று பெரும்பான்மையினத்தவர்கள் நம்பிக்கையளித்தார்கள்.

எனினும் 1921 இல் தேர்தல் வந்தபோது வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களுக்குக் கொழும்பில் சலுகைகள் தேவையில்லை என்றார்கள். தமிழர்கள் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இனம் என்பதால் கொழும்பில் அவசியம் இல்லை என்றார்கள். ஆக, வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் என்பதை அன்றே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரதேசத்தில் தனிப்பட்ட மொழி, கலாசாரம், சீதோஷ்ண நிலை வேறாக இருப்பின் சுயமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது உலக உரித்தாவணங்கள் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் பேசும் மக்கள் இந்த உரித்தை இழந்துவிடக்கூடாது. அரசாங்கமும் இதனை உணர்ந்து பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும். தமிழர் தரப்பும் வெறுமனே பேச்சில் கலந்துகொள்ளாமல் காத்திரமான விடயங்களை முன்வைத்து இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வொன்றை எட்டும் வகையில் செயற்பட வேண்டும். என்றார்

தொல்பொருள் உள்ள இடங்களில் சிங்களவர் வாழ்ந்ததாக கூறமுற்பட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்-- சித்தார்த்தன்

தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கில் 400 இடங்களில் தொல்பொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் சிங்களவர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுமானால் இருக்கின்ற பிரச்சினையை அது மேலும் சிக்கலாக்கும் என புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், தொல்பொருள் திணைக்களம் 400 இடங்களை அடையாளமிட்டுள்ளது. இது தொடர்பாக, புதைத்து வைத்துவிட்டு மீண்டும் எடுப்பதும், இல்லாத இடங்களில் தொல்பொருள் இருப்பதாகக் காட்டுவதையும் நாம் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். அதற்காக முற்றுமுழுதாக அப்படி ஒரு விடயம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஏனென்றால் எனது சொந்த பிரதேசமான கந்தரோடையிலும் பௌத்த சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த பௌத்தர்கள் நிச்சயமாக சிங்களவர்கள் அல்ல. சரித்திர ரீதியாகப் பார்க்கின்றபொழுது அவர்கள் தமிழர்கள். அந்தக் காலத்தில் பல தமிழர்கள் பௌத்தர்களாக இருந்திருக்கின்றனர். எனவே சிங்களவர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்று கூறுவதற்கு அதனை சான்றாகக் கொள்ளமுடியாது. இந்த ரீதியில் 400 இடங்களில் சிங்களவர்கள் வாழ்ந்தார்கள் என்று பொய்கூறி உலகை நம்பவைப்பது பாரிய துரோகமாகும். இதன்மூலம் அந்த இடம் தமக்கு சொந்தம் என்றுகூறி இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கி எம்மை மேலும் பலவீனமாக்கும் செயற்பாட்டையே இந்த அரசு மேற்கொள்கிறது என்று கூறியுள்ளார்.