16 May 2009

இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு- உலக உணவுத் திட்டம்

வடக்கின் முல்லைத்தீவு மோதல் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களை அரசாங்கம் சோதனை செய்கின்ற சோதனைச் சாவடி மையத்தில் வைத்து அம் மக்களுக்கு சமைத்த உணவினை வழங்க ஐ.நா உலக உணவுத் திட்டம் வழங்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓமந்தையில் உள்ள சோதனைச் சாவடிக்கு கடந்த ஒரு நாளில் மட்டும் மூவாயிரம் பேர் வரையில் வந்துள்ளார்கள் என்றும், இவர்களிலே பலருக்கு கடந்த பல நாட்களில் இவர்கள் சாப்பிடுகின்ற முதல் சமைத்த உணவு இதுவாகத்தான் இருக்கும் என்று இலங்கையில் உள்ள உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அத்னன் கான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment