68,000 இற்கு மேற்பட்டோர் மீள்குடியமர்வு : தங்கபாலு
வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்களில் 68,000 இற்கும் அதிகமானோர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பாராளுமன்ற குழுவினருக்கு தலைமை தாங்கிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்தார். டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
இலங்கையில் அகதிகள் முகாமில் இருந்த தமிழர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே 58,000 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
யாழ்ப்பாணத்துக்கு 2,955 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னாருக்கு 764 பேர், வவுனியாவுக்கு 890 பேரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
முல்லைத்தீவுக்கு 1,021 தமிழர்களும் யாழ்ப்பாணத்துக்கு 3,200 பேரும், வவுனியாவுக்கு 1000 பேரும், திருகோணமலைக்கு 59 பேரும், மட்டக்களப்புக்கு 2 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதன்படி 2 நாட்களிலும் மொத்தம் 10,241 பேர் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையும் சேர்த்தால் 68,000 இற்கும் அதிகமானோர் சொந்த இடங்களுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைவரும் முகாம்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்றார்.
No comments:
Post a Comment