31 October 2009

தமிழ் இளைஞர் கொலை : விசாரணை நடத்துமாறு ஆயர் கோரிக்கை

பம்பலப்பிட்டியில் கடலில் மனநோயாளியான தமிழ் இளைஞர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வேறு சிலரும் தாக்கியமை, மூழ்கடித்துதகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறும், இந்தச் சம்பவத்துடன், தொடர்புடையவர்களைக் கைது செய்வதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகும் என பொலிஸ் மா அதிபரிடம் கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் பேரருட்திரு டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தைக் பாதுகாக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் உணரப்படவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்

பொலிஸ் அதிகாரிகள், இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். இந்நிலையிலேயே இவ்வாறான குற்றங்களைத் தடுக்க முடியும் என்றும் ஆயர் சிக்கேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment