19 November 2009

அடைக்கலம் வழங்க அவுஸ்திரேலியா இணக்கம்

இந்தோனேஷியா கடலில் தரித்து நிற்கும் 'ஓசியானிக் வைகிங்' கப்பலில் உள்ளவர்களில் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு முதலில் அவுஸ்திரேலியா அடைக்கலம் அளிக்கவுள்ளதாகவும், ஏனையோர் பற்றி விரைவாக ஆராய்ந்து அவர்களுக்கும் அடைக்கலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை 22 பேர் கப்பலைவிட்டு இறங்கி இந்தோனேஷியக் கரையை அடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை எஞ்சியிருந்த ஐந்து குழந்தைகள், ஐந்து பெண்கள் உட்பட 56 பேரும் கப்பலிலிருந்து கரை இறங்கியுள்ளனர். இதன் பின்னர் இவர்கள் இந்தோனேஷியாவின் 'டன்யுங் பினாங்' தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கப்பலிலிருந்து இறங்கியவர்களில் உள்ள குழந்தைகளும் பெண்களும் தனியான இடமொன்றில் தங்க வைக்கப்படுவார்கள் என அவுஸ்திரேலிய பிரதமர் ரூட் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment