31 January 2016

நிழல்களுக்கு வெளியே

அவர் திரும்ப வந்துவிட்டார்


ஒரு வருடத்தின் பின் நிழலாக மறைந்திருந்த சர்ச்சைக்குரிய பிக்குவாகிய  தீவிரவாத பௌத்த குழுவாகிய பொது பல சேனாவுக்கு தலமைதாங்கும் கலகொட அத்தே ஞ}னசார திரும்பவும் செய்திகளின் சுழற்சி மையத்தின் முன்னிலைக்கு வந்துள்ளார். அவர் நீதிமன்றங்களை முற்றுகையிட்டுள்ளதுடன், அரசாங்க வழக்கறிஞர்களை அவமதித்திருப்பதுடன்; மற்றும் தனது வாழ்க்கையின் முக்கிய பகுதியாகிய ஆறு வருடங்களை காணாமற்போன தனது கணவரை தேடுவதில் கழித்துள்ள பெண்ணை அச்சுறுத்தி கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறது.

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னாலிகொடவின் மனைவியாகிய சந்தியா எக்னாலிகொட, தனது கணவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க அல்லது அவரது காணாமற் போனமை தொடர்பான உண்மைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு நீண்ட சட்டச் செயற்பாட்டை பின்தொடர்ந்து வருகிறார். அவரது ஆட்கொணர்வு மனு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வருடத்தின் முன்பு ராஜபக்ஸ நிருவாகத்தின் தோல்விக்குப் பின்னர், பொலன்னறுவ மாவட்டம் கிரித்தலயில் உள்ள ஒரு இராணுவ முகாமினை அவரது காணாமற்போதலுடன் காவல்துறையின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்பு படுத்தியதுடன், எக்னாலிகொடவின் விசாரணை சூடு பிடித்துள்ளது. பிரகீத் எக்னாலிகொடவின் காணாமற் போதலுடன் இராணுவத்தினருக்கு உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்கள் மேலும் விரிவடையத் தொடங்கியதுடன் இராணுவ அணியினர் அதை மூடிமறைக்க ஆரம்பித்தார்கள். இராணுவத்தினரிடமிருந்து விசாரணைக்கான ஒத்துழைப்பு குறைவடைந்ததினால் விரக்தியுற்ற குற்றவியல் புலனாய்வு பிரிவின் புலனாய்வாளர்கள் ஹோமாகம நீதவானிடம் முறையிட்டதை தொடர்ந்து, பிரகீத்தின் காணாமற் போதல் தொடர்பான விசாரணைகளில் இராணுவ படையினர் ஒத்துழைப்பு வழங்காவிடில் இராணுவ தலைவரான கிரிசாந்த டீ சில்வாவுக்கு நீதிமன்றக் கட்டளை அனுப்பப் போவதாக நீதவான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நாட்டில் 16 வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வைத்து இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஒரு இராணுவ வீரருக்கு தண்டணை வழங்கப்பட்டது, பெரும் தேசத்துரோகம் மற்றும் யுத்த வெற்றி வீரர்களுக்கு செய்யப்படும் துரோகம் என்று கருதப்பட்டது, ஒரு மாற்றுக் கருத்துள்ள ஊடகவியலாளரின் உயர்மட்டத்தினருடன் தொடர்புள்ள காணாமற் போதல் அதி தீவிர தேசியவாத உதிரிகளினால் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்த உதிரிக் குழுக்கள் பிரகீத்தை ஒரு இரட்டை தொடர்புள்ள எல்.ரீ.ரீ.ஈ உளவாளி எனச் சித்தரித்து அதனால் தற்பொழுது விசாரணையில் உள்ள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும்  தடுப்புக்காவலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சந்தியா குறிவைக்கப் படுகிறார்
சந்தியா எக்னாலிகொட செய்த குற்றம் தனது கணவர் குற்றமற்றவர் என தொடர்ந்து விசுவசித்ததோடு, அவர் காணாமற் போக்கடிக்கப் பட்டமைக் கணக்குச் சொல்லப்பட்டு தனது குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனப் போராடியது, அதுதான் சந்தியாவை அவர்களின் தாக்குதல் இலக்காக குறி வைக்கச் செய்தது. பொது பல சேனாவின் ஆரவாரத் தலைவரான கலகொட அத்தே ஞ}னசார, ஜூன் 2014.ல் அளுத்கமவில் தீய மதக் கலவரங்களை தூண்டியதாகச் சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்.

கடந்த திங்களன்று அவர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு எக்னாலிகொடவின் வழக்கில் தலையீடு செய்ய முயற்சித்துள்ளார். தனது பக்க வழக்கை கேட்கவேண்டும் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார். இந்த திடீர் எழுச்சியால் அதிர்ச்சியடைந்த நீதவான், அந்த பிக்கு இந்த காணாமற்போன வழக்கில் ஒரு கட்சிக்காரர் இல்லை என்றபடியால் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளார். அப்போது ஞ}னசார தேரர் தனது பழைய கெட்ட பழக்கத்தில் ஈடுபட்டார். ஸ்ரீலங்கா இராணுவத்திற்காக கிளர்ந்தெழும் போராளியாக தன்னைக் கற்பனை செய்துகொண்டு அரசாங்க வழக்கறிஞர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பிரகீத் எக்னாலிகொடவின் வழக்கை விசாரணை செய்யும் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடுமையாகச் சாடியுள்ளார்.  அவர் அவர்களை நபுன்சகர்கள் என அழைத்துள்ளார். அவர்களை தேசத்துரோகிகள் என கூறியுள்ளார். ஸ்ரீலங்கா ஒரு யுத்தத்தில் இருந்தது என அவர்களுக்கு நினைவூட்டினார். காணாமற்போன ஊடகவியலாளர் ஒரு எல்.ரீ.ரீ.ஈயின் ஒற்றர் எனச் சொல்லியுள்ளார்.
பின்னர் சங்கைக்குரிய பிக்கு சந்தியா எக்னாலிகொடவின் காதருகே குனிந்து இரகசியமாக கெட்ட வார்த்தைகளால் அச்சுறுத்தியுள்ளார், பின்னர் நீதிமன்ற அறையை விட்டு வேகமாக வெளியேறும் முன் தனது அங்கியையும் அவிழ்த்துள்ளார். இந்த வார்த்தைப் பிரயோகங்களுக்கு இடையில் ஹோமாகம நீதவான் பிக்குவை நோக்கி அவரை உடனடியாக சிறையில் தள்ளாமலிருப்பதற்காகன ஒரே காரணம் அவர் காவி உடையை தரித்திருப்பதுதான் என எச்சரிக்கையும் செய்தார். ஒரு சமூகத்தில் ஒரு பௌத்த துறவியை அந்த உடை வணக்கம் செலுத்த வைக்கிறது, காவி அங்கி தண்டனை விலக்குக்கான ஒரு உடை மற்றும் சமீப காலங்களில், பொது பல சேனாவைப் போல ஏற்றம் பெற்ற குழுக்கள் சாதாரண குண்டர்கள் மற்றும் மதவாத போராளிகள் போன்ற குற்றவாளிகளாக தங்களை உருமாற்றி சமாளித்து வருவதால் சட்டம் அவர்களை தொட முடியாமலுள்ளது.

கடந்த காலத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனை விலக்கு
2013 மற்றும் 2014 காலப்பகுதி ஒரு பின்னோக்கமான காலப்பகுதி, ராஜபக்ஸ ஆட்சியில்; முஸ்லிம் வியாபார நிலையங்களையும் ஆக்கிரமிப்புச் செய்ததுடன், அமைச்சு அலுவலகங்களிலும் அக்கிரமச் செயல்களை நடத்தியது, மிதவாத பிக்குகளை தாக்கியது, இஸ்லாமிய, கிறீஸ்தவ, மற்றும் இந்து ஆலயங்களை சேதப்படுத்தியதுடன் அவற்றை கைப்பற்றவும் செய்தது. இந்தக் குற்றங்களை செய்தாலும் அவர்கள் முழுதான தண்டனை விலக்கை அனுபவித்தார்கள். முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் இந்த குழுவின் நிகழ்வுகளில் பகிரங்கமாகவும் மற்றும் இரகசியமாகவும் கலந்து கொண்டிருந்தார், ராஜபக்ஸவின் நிருவாகம் வீழ்ச்சியடைந்ததின் பின்னரே இரகசியமாக நடைபெற்றவைகள் வெளிப்பட்டன, இந்த கடும்போக்கு குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சிலிருந்து உபகாரங்கள் வழங்கப்பட்டதுடன் மற்றும் சர்ச்சைக்குரிய பிக்குகளுக்கு ஒழுங்காக தானம் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளன. இயல்பாகவே காவல்துறையினர் அவர்கள் வழியில் குறுக்கிடுவதற்கு அஞ்சி நடுங்கினார்கள். பொது பல சேனா மற்றும் அவர்களின் தூரத்து உறவினர்களைப் போலவுள்ள ராவண பலய போன்ற அமைப்புகளும் “சிங்கள மட்டும்”ஸ்ரீலங்கா திட்டத்தின் கட்டமைப்பில் சக்கரவர்த்தியின் காலாட்படை வீரர்களாக இருந்தார்கள். ராஜபக்ஸக்கள் சிங்கள பெரும்பான்மை உணர்வுகள் உக்கிரமடைவதற்கும் மற்றும் ஏனைய இனக்குழுக்கள் அவநம்பிக்கை அடைவதற்கும் பொது பல சேனா பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தார்கள் மேலும் ராஜபக்ஸ நிருவாகம் சிங்கள பௌத்த தேசத்தை காப்பதற்கும் மற்றும் அதை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் முக்கியமாக அதனையே சார்ந்திருந்தது. 

2015 ஜனவரியில் நடைபெற்ற தேர்தலில் முன்னர் விசுவாசமாக இருந்த முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமூகத்தவர்கள் ஆட்சியில் இருந்த ஜனாதிபதியை ஒட்டுமொத்தமாக கைவிட்டதால், ராஜபக்ஸ ஆட்சியினர் கணக்குப்போட்ட தேர்தல் மூலோபாயம் இறுதி விளையாட்டில் மோசமான தவறாக மாறியது. ஆனால் அதன் சொந்த தீவிர தேசியவாத சித்தாந்தத்தின் பணயக் கைதியாக ஆட்சி இருந்ததால், இவைகளை பகுத்துணரும் தீர்க்கதரிசனம் அதற்கு இருக்கவில்லை.

முந்தைய ஆட்சியின் வீழ்ச்சியுடன் பொது பல சேனா மற்றும் அதன் துணைக் குழுக்கள் யாவும் அமைதியடைந்தன. பொது பல சேனாவுக்கும் மற்றும் அதன் மோசமான பிரமுகரான பிக்குவுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் ஓரளவு அமைதியாகத் தொடர்ந்தன. ராஜபக்ஸ நிருவாகத்தில் இருந்த நிகழ்ச்சி நிரல்களை அவர்கள் நிறுத்தி விட்டதால், அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு கிடைக்காமல் போய்விட்டதினால், பேரரசின் வீழ்ச்சி இந்த படையினரை கடும் புயலில் சிக்கிய சுக்கானற்ற படகாக ஆக்கிவிட்டது என்று நம்புவது எளிதாக இருந்தது, அவர்களது அரசியல் பிரசங்கத்தின் தீவிரம் மங்கியதால் அவர்கள் சரியாக எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்தார்கள்.
சிறிசேன அரசாங்கம் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளேயே,ஞ}னசார தேரரையும் மற்றும் அவரது நண்பர்களையும் நிழலில் இருந்து திரும்பவும் வெளியே எது கொண்டுவந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் இந்த நேரம் முக்கியமானதாக உள்ளது.

அவரது அதிகாரம் குறைக்கப்படுகிறதா?
சனியன்று சிங்கள பாதுகாப்பாளர் குழுவான சிங்க லே அமைப்பு, பிக்குகள் தலைமை தாங்க, வழக்கமான கட்டுக்கடங்காத தன்மைகளை வெளிப்படுத்தும் போக்குகளை காண்பித்தபடி நடத்திய,  மிகப் பரவலான ஒரு ஸ்டிக்கர் பிரச்சாரத்தின் மூலம் தன்னை ஒரு உண்மையான தீவிர தேசிய குழுவாக உயர்த்திக் கொண்டது. சனியன்று கொழும்பிலிருந்து கண்டிக்கு அவர்கள் ஒரு மோட்டார் வண்டி ஊர்வலத்தை நடத்தினார்கள், அங்கு தலதா மாளிகையின் முன்பாக அவர்கள் நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவைரை அங்கீகரிக்கும் பச்சை மற்றும் ஒறேஞ் வண்ண வரைகள் இல்லாத சிங்க கொடிகளை அசைத்தபடி ஒன்று கூடினார்கள். அரசியலமைப்பின்படி தேசியக் கொடியினை திரிபு படுத்துவது ஒரு குற்றமாகும். தங்கள் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் காவல்துறையினர் சனிக்கிழமை சிங்கலே ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களிடத்தில் திரிபு படுத்திய கொடியை நிறுத்துமாறு வேண்டினர். அதற்குப் பதிலாக  காவல்துறை உத்தியோகத்தர்கள்மீது சரமாரியான வாய்மொழி வசைமாரிகள் மேற்கொள்ளப் பட்டதுடன் மிகவும் அடங்காத்தனமாக வளர்ந்த கும்பல் ஒன்று அவர்களை எதிர்த்தும் நின்றது. சிங்கலே பிரச்சாரம் எங்கிருந்து வெளிப்பட்டது என்று தெரியவில்லை. சனிக்கிழமை நிலமை மோசமடைய ஆரம்பிப்பதற்கு முன்னர் நயவஞ்சக இனவெறி கொழும்பின் சுற்றுப்புறங்களிலும் மற்றும் பிரதான நகரங்களிலும் வெறும் ஒரு ஸ்டிக்கர் பிரச்சாரம் மூலமாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று ஒதுக்கிவிடுவது எளிதாக இருந்தது. சிங்க லே ஸ்டிக்கர் ஒட்டிய முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினரால் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட போதும் அல்லது இந்த மாத முற்பகுதியில் இனந்தெரியாத நபர்கள் நுகேகொடவில் உள்ள அநேக முஸ்லிம்களின் வீட்டு முன்கதவு மற்றும் சுற்றுச் சுவர்களில் சிங்க லே எனும் வாசகங்களை எழுதிய போதிலும் கூட அது எவருடைய தீவிர கவனத்தையும் ஈர்க்காதது போலவே தோன்றியது. 

சிங்க லே என்பது ஸ்ரீலங்காவின் பண்டைய பெயர்களில் ஒன்று, ஹெல மக்களின் நிலம் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சிங்க லே பிரச்சாரமானது கடந்த வருடம ஜனவரியில் ராஜபக்ஸ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் கீழிறக்கப்பட்ட உதிரிகளான தீவிர தேசியவாத சக்திகளுக்கு குரலும் வெளிப்பாடும் கொடுப்பதற்கான ஒரு முயற்சி என்றே தோன்றுகிறது. அந்தப் பிரச்சாரத்திற்கு முந்தைய ஆட்சியினருடன் இணைந்திருந்த உயர்மட்ட அரசியல் சக்திகள் நன்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக சில அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் கிளம்பியுள்ளன.

ஒருவேளை கலகொட அத்தே ஞ}னசார சிங்க லே தனது அதிகாரத்தையும் புகழையும் குறைப்பதற்காக வந்துள்ளது என உணருகிறார் போலும். ஒருவேளை பளபளப்பான மற்றொரு தீவிர தேசியவாதஅமைப்பின் எழுச்சி பொது பல சேனாவையும் அதன் சிறுபான்மை விரோத விளையாட்டையும் விஞ்சிவிடும்போலத் தெரிவதால் அது அவரை செயற்பாட்டில் இறங்கத் தூண்டியிருக்கும். அல்லது ஒருவேளை இந்த மாத முற்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவர் நடத்திய ஒரு சந்திப்பு காரணமாக அவர் கண்ட புதிய நம்பிக்கை வழக்கு நடக்கும்போது நீதிமன்றத்துக்குள் புகுந்து தகாத வார்த்தைகளை கக்கத் தூண்டியிருக்கலாம். ஞ}னசார தேரருக்கும் மற்றும் அவரது தூதுக்குழுவுக்கும் அனுமதி அளிக்கப்பட்ட ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு, கடந்த டிசம்பர் மாதம் பொது பல சேனா ஒரு கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கும்படி எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் வழங்கப்பட்டது என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. சிறிசேன நிருவாகம் இந்த சந்திப்பு பற்றி வேறு எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் நடைமுறையில் பெரிதாகப் பீற்றிக் கொண்டார். “ஜனாதிபதி எங்கள் கவலைகளை பெரிதும் மதித்தார்” என சந்திப்பிற்கு பின்னர் உடனயாக அவர் ஊடகங்களிடம் நம்பிக்கையுடன் சொன்னார். “ஜனாதிபதி இராணுவ தளபதியை உடனடியாக எங்கள் முன்னால் அழைத்து இராணுவத்தால் வவுனியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட சிங்கள கிராமமான போகஸ்வெவவில் உள்ள சிங்களக் குடும்பங்களை மீள் குடியேற்றுவதை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டார்” என அவர் மேலும் தெரிவித்தார்.அந்தச் சந்திப்பின் பின் 19, ஜனவரியில் அவருடன் நடத்தப்பட்ட நேர்காணலில் அந்த பிக்கு ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் பொது பல சேனாவால் ஆரம்பிக்கப்பட்ட நல்ல வேலைகளைப் பற்றி ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக கூறினார்.

ஜனாதிபதி பார்வையாளர்கள்
ஜனாதிபதி சிறிசேன தீவில் வாழும் பல்லின மக்களிடமும் இனங்களிடையே ஐக்கியம் வேண்டும் என்று திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்தபடியே தனது முதலாவது வருட நிறைவை தனது அலுவலகத்தில் கழித்தார். சிங்கள மையப்பகுதியில் உள்ள எளிய சிங்கள குடும்பம் ஒன்றில் பிறந்த ஜனாதிபதி சிறிசேனவிடம் மேல்தட்டு தாரண்மைவாதம் கிடையாது. அவர் தேவையில்லாமல் மோதல் தீர்மானம் மற்றும் இடைநிலை நீதிமொழி என்பனவற்றை பேசுவது கிடையாது. ஆனால் அவர் நீண்ட கொடிய ஒரு உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், சமாதானத்தையும் மற்றும் பொருளாதார சுபீட்சத்தையும் பேராவலுடன் விரும்பும் பெரும்பான்மை ஸ்ரீலங்கா மக்களின் அதிர்வுகளை வெளிப்படுத்தும் எளிய உலகக் கண்ணோட்டத்தை தழுவிக் கொண்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனா நம்பிக்கையை கட்டியெழுப்புதல், பாலத்தை கட்டியெழுப்புதல், இதயங்களையும் மற்றும் மனங்களையும் வெல்லுதல், மற்றும் திரும்பவும் ஒரே மக்களாக வாழ்வதற்காக இன மத வேலிகளை கடப்பது என்பன பற்றிப் பேசி வருகிறார். மைத்திரிபால சிறிசேனவுக்கு அவரது தொகுதி, பொது பல சேனா, இராவண பலய, மற்றும் இப்போது சிங்க லே பிரச்சாரம் ஆகிய அனைத்து சித்தாந்தங்களையும் எதிர்த்து நின்ற அனைவரையும்  உள்ளடக்கியுள்ளது. அவர்கள் சிங்களவர்கள், தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் ஆவர். அவர்கள் மிதவாதிகள் மற்றும் புத்தரின் கோட்பாட்டை உண்மையாக கடைப்பிடிப்பவர்கள். இதுதான் அவரது தேர்தல் வெற்றியின் முக்கிய காரணி, சர்வாதிகார மற்றும் பிரிவினை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியின் தோல்வியுடன் தொடர்பு படுத்தும்போது, அந்த ஆட்சி, தீவிர சிங்கள பௌத்த குழுக்களை அரவணைத்துள்ளதுடன் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் மனதில் அச்சத்தை தூண்டவும் அனுமதித்து வந்தது. 

இந்த சூழ்நிலையின் கீழ் ஜனாதிபதி சிறிசேன ஞ}னசார தேரரின் விருப்பப்படி அவருடன் ஒரு சந்திப்பை ஜனாதிபதி செயலகத்தில் நடத்த அனுமதி வழங்கியது புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது. ஜனாதிபதியின் தற்போதைய முயற்சிகள் ராஜபக்ஸவின் புத்துயிர்பு;பு பற்றிய அச்சத்தை தடுப்பதும் மற்றும் அவரது சொந்த சிங்கள பௌத்த நம்பிக்கைகளை வைத்து அவர் நடிக்கும் நாடகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள். அனால் சந்திப்புக்கு அனுமதி வழங்கிய அவரது முடிவு, அவரது சொந்த தொகுதிக்கு எதிராக செயல்படுவதற்கும் மற்றும் தேசிய ஒற்றுமையாளர் என அவர் கவனமாக கட்டியெழுப்பிய சொந்த தோற்றத்துக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அழுத்கம கலவரங்களை தூண்டிவிட்டு, மூன்றுபேர்கள் கொல்லப்படுவதற்கும், அந்த நகரில் இருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், வியாபாரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கும் காரணமாக இருந்ததாகச் குற்றம் சாட்டப்படும் குழுவான பொது பல சேனாவுக்கு ஜனாதிபதி சிறிசேன சட்டபூர்வ தன்மையை திரும்ப வழங்கியதன் விளைவை பார்வையாளர்கள் காணும்படி செய்துள்ளார்.
சிங்க லே யின் உதயம் மற்றும் தற்போதைய அரச தலைவரிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்டதாக நினைக்கும் ஆசிகள் ஆகிய தெளிவான இந்த இரண்டு நிகழ்வுகளின் ஒருங்கிணைவு காரணமாக ஞானசார தேரர் மற்றும் அவர் தலைமை தாங்கும் அமைப்பு ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க விளைவுகள் தோன்றியுள்ளன. அது, தான் மீண்டும் பாதுகாக்கப் பட்டுள்ளார்  என்று விசுவசிக்கும்படியான ஒரு துணிவை அவருக்கு வழங்கியுள்ளது மற்றும் பிக்கு நிழல்களை விட்டு வெளியே வந்து தனது பயங்கரவாத மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை திரும்பவும் ஆரம்பிக்கும் தைரியத்தையும் ஊட்டியுள்ளது. திடீரென திரும்பவும் 2014 வந்துவிட்டது.

எல்லாவற்றையும் தவிர அது ஒரளவு அதேமாதிரி அல்ல
கடந்த செவ்வாயன்று ஹோமாகம நீதவான் இந்த சூறையாடல் நடத்தும் துறவியை கைது செய்து பெப்ரவரி 9ம் திகதி வரை வெலிக்கடை சிறையில் அடைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கு ஒரு அடி முன் வைப்பதுபோல, நீதவான் புதனன்று பொது பல சேனா பிக்குவுக்கு ஆதரவாக செவ்வாய்க் கிழமை தனது நீதிமன்ற வளாகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்திய கும்பலைச் சேர்ந்த அங்கத்தவர்களை கைது செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய அமளி பற்றிய  ஊடக காணொளிக் காட்சிகள் வளாகத்தின் மீதும் மற்றும் சிறை அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண காவல்துறையினருக்கு  உதவும்.

நல்ல ஆரோக்கியத்துடன் காட்சியளிக்கும் அவர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டதுடன் வெலிக்கடைக்குச் செல்லும் வழியில் எழுச்சி மிக்க பேச்சுக்களை நடத்தியுள்ளார், ஆனால் சிறைச்சாலை வைத்தியர்கள் அந்தப் பிக்கு சிறைச்சாலை வைத்தியசாலைக்கு  அதாவது எல்லா குற்றவாளிகளான அரசியல்வாதிகளும் மற்றும் அவர்களது கூட்டாளிகளும் சிறை செல்லும் வேளைகளில்  வசிக்கும் இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள். ஆயினும் கூட பொது பல சேனா பொதுச்செயலாளர் தனது அடாவடித்தனமான செயல்களுக்காக சிறையில் தள்ளப்படும் வாய்ப்பு ஒரு வருடத்துக்கு முன்பு கிடைத்திருக்குமா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. பொது பல சேனா கும்பல், ஹோமாகம நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு சர்ச்சைக்குரிய பிக்குவை  சிறைச்சாலை பேரூந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஏற்றிச் செல்வதை தடை செய்ய முயன்றதின் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூட்டத்தை வழிநடத்திய பௌத்த பிக்குகளின் நடவடிக்கையை கண்டித்தார். “பௌத்தர்கள் என்கிற வகையில் இந்த நடவடிக்கைகளையிட்டு நாங்கள் வெட்கப் படுகிறோம்” என்று பிரதமர் சபையில் சொன்னார். ஒரு வகுப்பாசிரியர் மோசமாக நடந்துகொண்ட ஒரு மாணவனைப் பற்றி அதிபரிடம் முறையிடும் முறையில் விக்கிரமசிங்கா மேலும் தெரிவித்தது, ஹோமாகம நீதிமன்றில் நடந்த சம்பவம் பற்றிய முழு அறிக்கையையும் மகாநாயக்க தேரரிடம் சமாப்பிக்குமாறு தான் கால்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று.

பிக்கு கத்திகாவத் மசோதா
பிக்கு கத்திகாவத் (நடத்தை) மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கு செவ்வாயன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றின் முன்னால் நடந்தேறிய காட்சிகளைத் தவிர வேறு பெரிய வழக்கு எதுவும் தேவையில்லை. சர்ச்சைக்குரிய அந்த சட்ட வரைபு அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் பிரதம குருமார்களின் உத்தரவின் பிரகாரம் அறிமுகப்படுத்தப் பட்டது மற்றும்  இது நாட்டில் செயல்படும் பௌத்த துறவிகளின் ஆணையின்படி சங்க உறுப்பினர்களின் நன்னடத்தைக்கு சட்ட விளைவைக் கொடுக்க முற்படுகிறது.

இந்த மசோதாவை எதிர்க்கும் பிக்குகள், பௌத்த குருமார்களின் நடத்தையை மேற்பார்வை செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு இடமில்லை என விவாதித்து வருகிறார்கள். ஆனால் மசோதாவை எதிர்ப்பவர்கள், உலகம் என்றும் அறிந்திருந்த மிகச்சிறந்த பௌத்த மன்னரும் மற்றும் மதபோதகருமான அசோகச் சக்கரவர்த்தி அவர்களால் விசேடமாக 60,000 சோர சங்காக்களை அல்லது ஆட்சியினால் துறவிகளுக்கு வழங்கடும் நன்மைகளைப் பெறுவதற்காக மட்டுமே பிக்குகளின் அங்கிகளை தரித்திருந்த முரட்டுத் துறவிகளைக் களையெடுப்பதற்காக மூன்றாவது சங்க சபை கூட்டப்பட்டதை மறந்து விட்டார்கள்.

எந்த நேரத்திலும் விவாதிக்கத் தக்க வகையில் அசோகன் மிகப்பெரும் பௌத்த மன்னன், ஸ்ரீலங்கா உட்பட ஒன்பது நாடுகளுக்கு அவர் தூதுக்குழுக்களை அனுப்பினார், பௌத்த போதனை வட இந்தியாவில் மரித்து விட்டாலும் கூட,ஆசியாவின் இதர பகுதிகளில் அது நிலைத்து நிற்கவேண்டுமே என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவர் அதைச் செய்தார். மகாவம்சத்தின் ஐந்தாம் பாடத்தின்படி மூன்றாவது சபையை பற்றிய தலைப்பின் கீழ், அசோக மன்னர் ஒவ்வொரு பிக்குவினிடத்திலும் தானே புத்தரின் போதனைகளைப் பற்றி கேள்விகளைக் கேட்டு அவர்கள் தவறான கோட்பாட்டை விவரித்தால் அவர்களை துறவி நிலையில் இருந்து அவர்களை வெளியேற்றினார் என்று சொல்லப்பட்டுள்ளது.

பல வழிகளிலும் ஆட்சியாளருக்கும் மற்றும் சங்கவுக்கும் இடையில் உள்ள உறவின் மூலமாக தேசத்தின் மாதிரியாக அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதனால் பௌத்தம் வாழ்வுடன் இணையத்தக்க திறனுள்ளதாகத் தோன்றும், அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டிய தார்மீக கடமைகளைக் கொண்டுள்ளார்கள். அரசியல் கோளத்தில் இருள் சூழ்ந்த வேளையில் சோபித தேரர் இந்தப் பங்கை திறமையாக ஆற்றினார், ஒருவேளை  பிக்குகள் கோட்பாட்டுப் போதனையில் இருந்து விலகியிருக்கும்போது தவறு செய்கிற பிக்குகளுக்கு ஒழுக்க நெறிமுறையை போதிப்பதற்கான அதிகாரத்தை பிரதம பிக்குவிற்கு வழங்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. இந்த சட்டவாக்கத்திற்கான வேண்டுகோளை மகாநாயக்க தேரர்கள் விடுத்திருப்பதற்கான காரணம், பொது பல சேனாவின் அச்சுறுத்தும் ஆட்சி காரணமாக மிதவாத பிக்குகள் மத்தியில் தோன்றியுள்ள விரக்கி மற்றும் உதவியற்ற தன்மையான உணர்வுகளினால் தோன்றியுள்ள எழுச்சியின் ஒரு பகுதியே. அவர்களில் பலரும் அந்த துறவிகளின் நடத்தையை பற்றி கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள், ஆனால் கோட்பாட்டின் விலகல் மற்றும் தவறான புரிதல் காரணமாக அவர்கள் பெருமளவு அதிகாரமற்றவர்களாக உள்ளனர். சங்காவின் நடத்தையை ஆட்சிபுரியும் வினய அல்லது ஒழுக்காற்று குறியீடுகள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டவை அல்ல மற்றும் துறவி நிலையில் இருந்து வெளியேற்றப் பட்டதின் பின்பும் ஒரு பிக்கு காவி அங்கி அணிந்து ஒரு பிக்குவைப் போல காட்சியளிப்பதை அதற்கு தடுக்கும் திறன் இல்லை. அறிமுகப் படுத்தப்படும் இந்த மசோதா இந்த நிலமையை மாற்றி விதிகளுக்கு சட்டபூர்வ விளைவைக் கொடுக்கிறது.

நீதிமன்ற தாக்குதலுக்கான உடனடி கண்டனம் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்ததுக்காக ஞ}னசார தேரரை கைது செய்வதை அனுமதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பன முந்தைய ஆட்சியில் இருந்து தனித்து காட்சியளிக்கிறது. தற்போதைய அரசாங்கம் பொருளாதாரம் முதல் இரண்டு பிரதான கட்சிகளின் மெல்லிய கூட்டணியில் எழும் முறுகல் காரணமாக கொதித்தெழும் அழுத்தங்களை சமாளிப்பது வரையான வீச்சில் உள்ள அதன் சொந்த சிக்கல்களினால் முடிவில்லா பிரச்சினைகளில் அமிழ்ந்துள்ளது, அது இனவெறி கொண்டதோ அல்லது இனவெறி பாராட்டுபவர்கள் பக்கம் சாய்ந்துள்ளதோ இல்லை. எனினும் அரசாங்கம் செய்வதற்கு ஆவல் கொண்டுள்ளது என்னவென்றால் ஏற்கனவே பொதுபலசேனாவுக்கு பார்வையாளர் அந்தஸ்தை ஜனாதிபதி வழங்கியிருப்பது ஆதாரமாக உள்ளதினால், இந்த தீவிரவாத குழுவை மென்மையாகவும் கவனமாகவும் கையாள்வதுடன் மற்றும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் தமது ஆதரவை அதிகரிக்கும் நோக்கில் அவர்களது நோக்கங்கள் சிலவற்றை திருப்திப் படுத்துவது ஆகும். இந்த அரசாங்கத்திற்கு அதன் இறுதி விருப்பத்திலிருந்து  மாறுபட்ட விதமாக உள்ள உண்மையான சோதனை என்னவென்றால், அதன் தகுதி மற்றும் அரசியல் விருப்பம் என்பனவற்றை பயன்படுத்தி பொது பல சேனா மற்றும் அதுபோன்ற எண்ணம் கொண்ட குழுக்களின் சித்தாந்தங்களையும், அவர்கள் சார்ந்துள்ள அனைத்தையும்  பகிரங்கமாக கண்டிப்பதுடன், சட்டத்தை விரைவாகவும் மற்றும் வன்முறை மற்றும் இனத்துவேசம் புரிபவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் அமல்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதுடன் மற்றும் கடந்த வருடம் இந்த அரசாங்கம் ஆட்சிக் கட்டில் ஏறுவதற்கு பின்துணை வழங்கிய மிகப் பெரும்பான்மையான மித வாதிகளை சமாதானப் படுத்தவும் வேண்டும், இந்த குழுக்கள் பற்றிப்பிடித்துள்ள இன மத பாசிசத்தின் எந்தப் பகுதிக்கும் சார்பாகவோ மற்றும் உடந்தையாகவோ அரசாங்கம் இருக்கக் கூடாது.

கடந்தமுறை ஐதேக தலைமையிலான அரசாங்கம் தோற்கடிக்கப் பட்டது, தேசியவாத அலைகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்கா எல்.ரீ.ரீ.ஈ உடன் மேற்கொண்ட சமாதான நடவடிக்கை மற்றும் யுத்த நிறுத்தம் என்பனவற்றின்மீது வெறியை கிளறிவிட்டு அதன்  எதிராளிகள் வெற்றியை தம் வசமாக்கிக் கொண்டார்கள். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஏமாற்றங்கள் மற்றும் பல விடயங்களில் அதன் தேக்கம் என்பன ராஜபக்ஸ சார்பான அணியினருக்கு தீவிர தேசியவாத சக்தியின் ஆதரவை முன்னரைவிட அதிகம் நாடவேண்டிய தேவையை ஏற்படுத்தும்.

அந்த பிரிவினருக்கு எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களில் ஐதேகவின் வாய்ப்புகளை பள்ளத்தில் தள்ளுவதற்கு ஏதாவது நம்பிக்கை இருக்குமானால், சிங்கள இனத்தின் சக்தியை பெறுவதற்கு  நிச்சயமாக அவர்கள் சிங்கள தேசியவாத அலை மீது சவாரி செய்யவேண்டியதும்; மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக அச்சத்தை பரப்புவதும் அவசியம். எனவே இனங்களிடையே முனைவாக்கத்தை ஏற்படுத்தி நலிந்த நிலையிலுள்ள நல்லிணக்க முயற்சிகளை சீர் குலைக்கும் வகையில் அச்சுறுத்தலை உண்டாக்கும் விதமாக திடீரென மீள் எழுச்சி பெற்றுள்ள இன மத தீவிரவாதத்தை விசாரணை செய்து அதை தடுத்து நிறுத்த வேண்டியது அரசாங்கத்தின் சாதாரண தார்மீகக் கடமையிலும் அப்பாற்பட்டதாகும். ஓநாய்களை அருகில் வராமல் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவதுடன் மற்றும் கீழிறக்கப்பட்டுள்ள நிழல்கள் கூட தனது சொந்த அரசியல் உயிர்வாழ்தலுக்கு முக்கியம் என்றுகூட சிலர் நிரூபிக்கலாம்.
 
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி- தேனீ

No comments:

Post a Comment