ஒரு காலத்தில் 10 இலட்சமாக இருந்த மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொகை இன்று 2 இலட்சம் வரையில் குறைவடைந்துள்ளது. பெருந்தோட்ட துறைக்கு வழங்கப்பட வேண்டிய வரப்பிரசாதங்கள் வழங்கப்படாமையே இந்நிலைக்கு காரணம். எனவே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் மரணப்பொறியாகவே அமைந்துள்ளது என்று சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து விலயுறுத்தின.
தற்போது அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்கள் போதாது என்பதால் தாம் பதவியை துறக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களை ஆட்சியில் அமர்த்திய மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அமைசர் மனோ கணேசன்,திகாம்பரம்,இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னண் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
கொழும்பு சன சமூக நிலையத்தில் நவ சமசமாஜ கட்சி,அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான இயக்கம், சுகாதார சேவைகள் சங்கம், சோஷலிச ஐக்கிய முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வமைப்பின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
சட்டத்தரணி ஈ.தம்பையா தெரிவிக்கையில்,
எதிர்வரும் 14 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது. முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்திருந்தது. மறுபுறம் தழிழ் முற் போக்கு கூட்டணி 1000 ரூபாய் சம்பள் அதிகரிப்பு கோரி தலவாக்கலையில் சத்தியாக்கிரக போராட்டம் செய்தனர்.
அதனால் இது யாரால் முன்வைக்கப்பட்டது எதற்காக முன்வைக்கப்பட்டது என்பது தொடர்பில் ஆராயாமல் சகலரும் ஏற்றுக்கொண்ட விடயம் என்றே கூறவேண்டும். ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற எவரும் முன்வரவில்லை. சகலரும் பின்வாங்கிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். தற்போது அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும், ஜோன் செனவிரட்னவும் 730 பெற்றுக்கொண்டு சேவைக்கு திரும்புமாறு கூறியுள்ளனர். அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்தில் 820 ரூபாய் பெற்றுக்கொடுப்பதாகவும் அதற்கு தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது இன்று 730 பெற்றுக்கொண்டு சேவைக்கு திரும்ப வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதனால் இன்று இவ்வாறு பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட வேண்டியுள்ளது. எவ்வாறாயினும் தற்போதே கூட்டு ஒப்பந்தம் கைசாத்தாகியிருக்கலாம் என்ற சந்தேகமும் எம்முல் உள்ளது. 730 சம்பளத்திற்கு 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படும் என்று கம்பபனிகள் தெரிவித்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 6 நாடகள் வேலை வழங்க வேண்டியது கட்டாயமாகும். வருடத்திற்கு 300 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறாயின் தற்போது கைசாத்திடப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் உரிமையை பறிக்கப்படபோகின்றது.
இது ஒரு பாராதூரமான பிரச்சினையாக உள்ளபோது கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதமாக கூறி சமாளிக்கின்றன. இது உண்மைக்கு புறம்பான விடயமாகும். 2 கம்பனிகளை தவிர அனைத்து கம்பனிகளும் லாபமீட்டுவதாகவே உள்ளன. அத்துடன் இலங்கையி்ன் பெருந்தோட்ட உற்பத்திகளுக்கான கேள்வி வெளிநாட்டு சந்தையில் குறைவடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
அதற்கு தொழிலாளர்கள் பொறுப்பாக முடியாது. தற்போது பொறுப்பேற்றுள்ள கம்பனிகளே பொறுப்பு கூற வேண்டும். வெளிநாட்டு சந்தையிலிருந்த இலங்கை உற்பத்திகளுக்கான கேள்வியை கம்பனிகளே அழித்தன என்பதில் மாற்று நிலைப்பாடு இல்லை என்றார்.
இவ் ஊடகவியலாளர் சந்த்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சோஷலிச ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிக்கையில்,
தொண்டமான மஹிந்தவின் பக்கமாக அமர்ந்து தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுக்கொடுப்பதாக கூறியபோதும் மக்கள் அதனை ஏற்காது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை நம்பி அவர்களை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால் இன்று மக்களிடத்தில் விதைக்கப்பட்ட நம்பிக்கையின் பிரகாரம் பிரதமர் நடந்து கொள்ளவில்லை.
மறுபுறம் தோட்ட கம்பனிகளும் நஷ்டம் ஈட்டுவதாக கூறிக்கொண்டு தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்க தயங்குகின்றது. கம்பனிகள் உண்மையாகவே நஷ்டம் ஈட்டுமாயின் அவற்கை கைவிடாது ஏன் பற்றிப்பிடித்துக்கொண்டுள்ளன?. அவர்கள் லாபம் ஈட்டுவதாலேயே இதுவரையிலும் பற்றிக்கொண்டுள்ளனர். மக்களை மட்டுமட்டுமன்றி நஷ்டம் என்ற பேரில் தோட்ட கம்பபனிகள் அரசாங்கத்தினையும் ஏமாற்றுகின்றன.
இவ்வாறான நிலையில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர் மனோ கணேசன், இராதாகிருஸ்னண்,திகாம்பரம் ஆகியோர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அவர்களே 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்ய தவறியுள்ளனர். அதற்கு மாறாக அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்கான வரப்பிரசாதங்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக போவதாக கூறிக்கொண்டுள்ளார். அவர் முதலில் மலையக மக்கள் குறித்து கவனம் கொள்ள வேண்டும். 1000 ரூபாய் பெற்றுக்கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் அதற்காக அவர்கள் பதவி விலக வேண்டும் அதனை விடுத்து அவரின் அமைச்சு குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவது நியாயமானதல்ல என்றார்.
அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கையில்,
கூட்டு ஒப்பந்தம் என்பது மலையக மக்களை இல்லாது செய்கின்ற மரணப்பொறியாகும். கடந்த காலங்களில் 10 இலட்சமாக இருந்த தோட்ட தொழிலாளர் தொகை படிப்படியாக குறைவடைந்துள்ளது. அதற்கு கூட்டு ஒப்பந்தமே பிரதான காரணம். மலையக மக்கள் காலம் காலமாக செய்துவரும் இந்த தொழிலுக்கான வரப்பிரசாதங்களை உரிய தரப்பினர் பெற்றுக்கொடுக்காத காரணத்தினாலேயே குறித்த தொழிலை விடுத்து செல்லும் நிலைப்பாட்டுக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
தற்போது அவர்களுக்கு 730 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் 1000 ரூபாய் கோருகின்றனர். அதுவும் அவர்களுக்கு போதுமான சம்பளம் அல்ல. இங்கு மக்களின் உழைப்பிற்கான சம்பளத்தினையே வழங்கவேண்டும். அது கவர்ச்சியான சம்பளமாக அமையும் பட்சத்தில் மாத்திரமே தொழிலாளர்களும் தொழில்துறையும் பாதுகாக்கப்படும்.
அதற்கு மாறாக முதலாளித்துவத்துக்கு ஆட்பட்டு மலையக மக்கள் அடிமைகள் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட கூடாது. தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதார முறைமைகளில் முற்றாக மாற்றம் செய்யவுள்ளது அதற்காக தோட்ட தொழிலை ஒழித்து அங்குள்ள மக்களை விரட்டியடிக்கும் முயற்சியே அவர்களின் சம்பள குறைப்பாகும் அதனாலேயே கூட்டு ஒப்பந்தத்தினை மரணப்பொறி என்று குறிப்பிடுகின்றோம் என்றார்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment