26 June 2009

கப்பலில் உணவு, மருந்து அனுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து கப்பலில் உணவு, மருந்து பொருட்கள் அனுப்ப முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தினை அவுஸ்திரேலிய அரசு கோர வேண்டுமென அவுஸ்திரேலிய வெளி விவகார அமைச்சர் ஸ்டீபன் சுமித்துக்கு அந்நாட்டு அமைச்சர் ஜெனி மிக்ககோஸ் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அக் கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது

உலகில் இன்று பார்க்கப்படுகின்ற மிகப்பயங்கரமான மனிதப் பேரவலமாக இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரத்தினை கூறலாம். அவ்வளவுக்கு மோசமான நிலைமையை இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.அவர்களின் இந்த நிலைமையை உலகின் மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. ஆகவே அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் பாரிய மனிதப் பேரவலத்தினை எதிர்நோக்கியுள்ள அந்த மக்களுக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment