30 August 2009

முகாம்களிலிருந்து 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்

வட பகுதி அகதிகள் முகாம்களிலிருந்து இதுவரை சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பிடக்கூடிய தொகையினர் சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார். இது மேலும் அதிகரிக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை.அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர்.

அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment