30 August 2009

வீடியோ காட்சிகள் தொடர்பாக இலங்கைமீது விசாரணை : எரிக் சொல்ஹெய்ம்

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிடப்பட்ட காட்சிகள் தொடர்பாக இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டுமென நோர்வே சர்வதேச அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் வள அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தி யுள்ளதாகவும், நோர்வே க்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது தொடர்பாக அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தெரிவிக்கையில் இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை. இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச் சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை என்றும் இலங்கை அரசுக்கு எதிரானவர்கள் வெள்ளை வேன் மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளை வேன் கடத்தலுக்கு அதிகம் ஆளாகின்றனர்" என்றார்.

இது குறித்து இலங்கை அரசு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.மேலும் தெரிவிக்கையில் நட்புறவு ரீதியான நோர்வே அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வேதனையளிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சொல்ஹெய்ம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த காலங்களில் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சொல்ஹெய்ம் மிக முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிடப்படுகிறது

No comments:

Post a Comment