யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2543 குடும்பங்கள் குடியமர்த்த நடவடிக்கை
வவுனியா முகாம்களில் உள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 2543 குடும்பங்கள் விரைவில் யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார் இவர்களின் விபரங்கள் வவுனியா அதிகாரிகளினால் திரட்டப்பட்டு யாழ் மாவட்ட செயலகத்துக்கும், பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு;ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் குடும்பங்களின் விபரங்கள் குறித்து யாழ் மாவட்ட சிவில் அதிகாரிகளும், பொலிசாரும் நடத்திய விசாரணைகள் முடிவடைந்து இது தொடர்பான பட்டியல்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மேலும் 2ம் கட்டமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 15167 குடும்பங்கள் தொடர்பான தகவல்களும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், 44,974 பேரின் விபரங்கள் தொடர்பாக சிவில் அதிகாரிகளினாலும், அப் பிரதேச பொலிசாரினதும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment