செனல்-4 வீடியோ காட்சி - விசாரணை நடத்தப்பட வேண்டும்
பிரித்தானியாவின் செனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.நா வின் சட்டவிரோத கைதுகள் மற்றும் படுகொலைகளுக்கான பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளதாக ஏஎப்பி செய்தி தெரிவித்துள்ளது. குறித்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மை தொடர்பாக ஆராயப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள போதிலும், விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததென பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளார் குறித்த வீடியோ காட்சிகள் பாரிய மனித உரிமை மீறல்களை விதந்துரைப்பதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment