600 தொன் நிவாரணப் பொருட்களை இந்தியா கையளித்தது
இடம்பெயந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 600 தொன் இந்திய நிவாரணப் நிவாரணபொருட்களை ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புனேயிடம் இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று கையளித்தார்.அனர்த்த நிவாரணம் மற்றும் மீள் குடியேற்றத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீனும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார் இதில் உலர் உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், துணிகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள் ,காலணிகள் உட்பட பல பொருட்கள் இவ் நிவாரணப் பொருட்களில் அடங்குவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தேவையான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டம் மற்றும் ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஊடாக தற்போது இடம் பெயர்ந்து வாழும் மற்றும் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இவை விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பாக வடக்கில் 180நாள் கால அவகாசத்திலான மீள் குடியேற்றத் திட்டத்திற்கு உதவும் வகையில் விசேட கவனம் செலுத்தப்படும் ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவிக்கின்றார்
No comments:
Post a Comment