08 April 2009

ஏ9 வீதி மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது

யாழ் குடாநாட்டிற்கான ஏ9 தரைவழி பாதையை மே மாதம் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் வி. பி. ஏக்க நாயக்க தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையினால் வடக்கு மக்கள் பயனடைவார்கள் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வின் பணிப்பின் பேரிலேயே இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சின அனுமதியும் கிடைத்துள்ளது. தற்பொழுது இந்த பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றமையினாலேயே இந்த நடவடிக்கை தாமதமடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment: