வடமாகாண சபை தலைமையகம்
மாங்குளத்தில் அமைக்கப்படவுள்ள வட மாகாண சபையின் தலைமையகத்திற்காக 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான நிதி எதிர்வரும் 2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் சேதம் அடைந்துள்ள உள்ளூராட்சிக் கட்டிடங்களைப் புனரமைப்பதற்காக 625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment