02 September 2009

ஜனாதிபதி - த.தே.கூ சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையே எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின் போது குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலவரம், நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளவர்களின் துரித மீள் குடியேற்றம், சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அத்துமீறிய குடியேற்றங்கள்,மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment