31 October 2009

மன்னாருக்கு அதிநவீன மிதிவெடி அகற்றும் இயந்திரங்கள்

மன்னார் நெற்களஞ்சிய பகுதி மற்றும் விடத்தல்தீவு பகுதியில் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக நேற்று தருவிக்கப்பட்ட 5 மிதி வெடி அகற்றும் இயந்திரங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவித்தார். மேற்படி சுமார் 89 சதுர கி.மீ பகுதியில் நிலக்கண்ணி வெடிகள், மிதிவெடிகள் அகற்ற வேண்டியுள்ளது. அவை மன்னார் கட்டுக்கரைக்குளம் பகுதி உட்பட ஏனைய பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment