24 October 2009

தமிழக எம்.பி.க்கள் குழு பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சந்திப்பு
“பருவ மழைக்கு முன்பு தமிழர்கள் வீடு திரும்ப இலங்கை அரசிடம் வற்புறுத்துங்கள்”


இலங்கை சென்று வந்த தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தனர். அப்போது, பருவ மழைக்கு முன்பு தமிழர்கள் வீடு திரும்ப இலங்கை அரசிடம் வற்புறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், போர்ப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களை பல்வேறு முகாம்களில் இலங்கை அரசு தங்க வைத்துள்ளது.
முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. போர் நடைபெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்றிய பிறகு தமிழர்கள் அவரவர் வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது.
http://www.thenee.com/html/241009-6.html

No comments:

Post a Comment