24 October 2009

யாழ் மாவட்டத்தில் 3,500 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

வவுனியா இடம்பெயர் முகாம்களில் தங்கியிருந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 3,500 பேர் அழைத்து வரப்பட்டு, சாவகச்சேரியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சொந்த இடங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நாளில் இந்தளவு எண்ணிகையிலான அகதிகள் அழைத்து வரப்பட்டதும் உடனுக்குடன் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.முதல் தொகுதியாக 2,400 பேரும், இரண்டாவது தொகுதியாக 1,100பேரும் 43 பஸ்களில் அழைத்து வரப்பட்டு சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் உள்ள தென்மராட்சி கலைமன்ற கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாவகச்சேரி, கோப்பாய், சண்டிலிப்பாய், நல்லூர், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களாவர்சகலரும் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிரதேச செயலர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடிச் செலவுக்காக 5 ஆயிரம் ரூபாவை வழங்கினார். பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment