29 October 2009

புலிகளின் அரசியல் முகமூடி தமிழ் தேசிய கூட்டமைப்பு!

வியப்பான பல விடயங்களை உள்ளடக்கி இன்றைய நவீன யுகத்திலும் தமிழர்களை வெறும் உணர்சிய+ட்டி மேலும் மேலும் அடிமையாக்க புலி தலைவர் பிரபாகரனால் பலாத்காரமாக உருவாக்கப்பட்ட சில கட்சிகளின் இணைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இக்கூத்தமைப்பு இன்றும் மிகக்குறுகிய நோக்கங்களையும் கொள்ளை அரசியல் இலாபமடையவும் தமிழரின் அபிலாசைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. இதில் வியப்பென்னவெனில் இக்கூத்தமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் முதுகெலும்பை கடந்தகாலத்தில் புலிகள் உடைத்தெறிந்ததுதான்.பழம்பெரும் கட்சியாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானதுமான தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதான விடுதலைப்போராட்ட இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் காங்கிரஸ் என்பன இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளின் இயக்கங்களின் தலைமைகள் புலிகளினால் நயவஞ்சகமாக அழிக்கப்பட்டன. இருப்பினும் அரசியல் என்ற சாக்கடையில் வாக்குகளைப் பெற்று பல்வேறுபட்ட சுகபோகங்களை அனுபவிக்கவும் கேவலம் புலிகளிடமிருந்து தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளவும் புலிகளின் காலடியில் மண்டியிட்டனர்.
முழுமை http://www.sooddram.com/Articles/general/Oct292009_Muhunthan.htm

No comments:

Post a Comment