25 October 2009

சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து செயற்பட தயார்- வீ.ஆனந்தசங்கரி

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டமொன்றை சிறுபான்மை கட்சிகள் தனது கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்குமானால் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக த.வி.கூ இன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக எவரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இணைந்து செயற்படுமாறே பலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து அழைப்புக் கிடைத்தால் பேச்சவார்த்தை நடத்தவும் தயாராகவுள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதற்கு இந்திய அரசியல் சட்ட(இந்தியன் மொடல்) முறையை பின்பற்றுவது சிறந்தது. இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள மாநிலங்களுக்கான அதிகாரம் தொடர்பான விடயங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஒப்பான தீர்வுத் திட்டமொன்றையோ அல்லது அதைவிடவும் சிறந்ததான திட்டமொன்றையோ சிறுபான்மை கட்சிகள் முன் வைக்குமானால் தமது கட்சி அதனை வரவேற்பதுடள் இணைந்து செயற்படவும் தயாராக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment