28 October 2009

புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கைது

பாதுகாப்புப் பிரிவினருக்கு உளவுத் தகவல்களை வழங்கும் போர்வையில் மறைந்திருந்த புலி உறுப்பினரான சிவனேசராஜா வினோத்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிசார் இவர் பிரபாகரனின் நெருங்கிய சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த இந்நபர் தாமாகவே புலிகள் பற்றிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்துப் பொலிஸாரிடம் சரணடைந்ததாகவும், மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதாக தெரிவித்து பொலிசாருடன் இணைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினர், இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கைகளில் இவர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் எனவும், சிங்களவர் ஒருவரைப் போன்று நடித்து இவர் தெற்கில் தகவல்களைத் திரட்டியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது

No comments:

Post a Comment