23 October 2009

அமெரிக்க வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக வழக்கு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ராஜரட்னம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்து அமெரிக்க நீதிமன்றத்தில் புலிகளின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வழக்குத் தாக்குதல் செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாவட்ட நீதிமன்றில் சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பித்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். 2001ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் ராஜ் ராஜரட்னத்தின் குடும்பத்தார் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்புப் புறநகர்ப் பகுதியொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் தமது கணவர் உயிரிழந்ததாக கருணாமுனிகே கிறிசாந்தி என்பவர் நியூ ஜேர்ஸி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment