19 November 2009

மட்டக்களப்பில் 18 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து யாழ் மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் கிளிநொச்சி ஊடாக மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்பு வந்து சேர்ந்துள்ளனர் சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இவர்கள் சிவில் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இதேவேளை மெனிக் பார் முகாமிலுள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் இவ்வாறு மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளின் தகவல்களின் படி வவுனியா முகாம்களில் இருந்து கடந்த ஆகஸ்ட் 10 முதல் இன்று வரை 5 தொகுதிகளில் 863 குடும்பங்களைச் சேர்ந்த 2398 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், யாழ் மாவட்ட முகாம்களிலிருந்து முதல் தடவையாக 18 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் அனுப்பி வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment