02 November 2009

வவுனியாவிலிருந்து 2139 பேர் யாழ் வருகை

வவுனியா முகாம்களில் இருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இம் மக்கள் யாழ். கச்சேரியை வந்தடைந்து பின்னர் தீவகப் பகுதிகளுக்குச் சென்றனர். அதேநேரம் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் கரவெட்டி விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்திற்கும் பருத்தித்துறை பிரதேச செயலர் அலுவலகத்திற்கும் வந்து சேர்ந்தனர்.

No comments:

Post a Comment