ஒரு வாரத்திற்குள் 6833 பேர் மீள்குடியேற்றம் எஞ்சியோர் 71 நாட்களில் குடியேற்றப்படுவர் - சமரசிங்க
நலன்புரி முகாம்களில் ஒருவாரத்திற்கு முன்னர் 1,43,161 பேரே இருந்தனர் அத்தொகை இன்று 1,34,328 பேராக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்குள் 6833 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மீதமிருப்போரில் பெரும்பாலானோர் 71 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் இன்று வரையிலும் 1,36,238 பேர் மட்டுமே இருக்கின்றனர். வவுனியாவிலுள்ள முகாம்களில் 127495 பேரும் , யாழ்ப்பாணத்தில் 2034 பேரும், மன்னாரில் 970 பேரும், திருகோணமலையில் 2762 பேரும் 7 வைத்தியசாலைகளில் உறவினர்களுடன் 3067 பேரும் இருக்கின்றனர்.
முகாம்களில் ஒரு வாரத்திற்கு முன்னர் 143161 பேர் இருந்தனர் இன்று அந்த எண்ணிக்கை 136328 ஆக குறைந்துள்ளது. மக்கள் அவர்களது சொந்த கிராமங்களிலேயே மீளக்குடியமர்த்தப்படுகின்றனர் அந்த நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டுமாயின் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment