26 November 2009

இந்தியத் தூதுவர் யாழ் விஜயம்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் தலைமையிலான குழுவினர் நேற்றுக்கால யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். இக் குழுவினர் முதலில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டனர். பின்னர் யாழ் மாநகரசபைக்கு சென்றபோது அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ் மாநகரசபையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் யாழ் நகரசபையின் செயற்பாடு, யாழ் மாநகர புனரமைப்பு தொடர்பாக யாழ் மாநகர மேயரிடம் இந்தியத் தூதுவர் விரிவாக கேட்டறிந்தார். பின்னர் நல்லை ஆதினத்துக்கு சென்ற இக் குழுவினர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாhரிய சுவாமிகளுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு சென்று யாழ் பல்கலைகழக துணைவேந்தர், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடினார். பொது நூலகத்திற்கு சென்று நூலகத்தின் செயற்பாடுகள், தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment