சுவிற்சர்லாந்தில் ‘பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி’ கட்சித் தோழர்கள் ஆதரவாளர்களுடன் சந்திப்பு
சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு ஸ்ரீதரன் (சுகு) அவர்களுடன் நாளை சூரிச் நகரில் கட்சியின் தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்துரையாடவுள்ளனர். இக் கலந்துரையாடலில் புலம் பெயர் ஐரோப்பா வாழ் கட்சித் தோழர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இச் சந்திப்பின் போது இலங்கையினதும், தற்போதைய அரசியல் நிலைமை, தமிழ் மக்களின் தற்போதைய, எதிர்கால அரசியல் இடம்பெயர்ந்தோரின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment