20 November 2009

சரத் பொன்சேகா கொலை முயற்சி : அரசு மறுப்பு

கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாகவும், சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் எதுவித உண்மையும் என தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் {ஹணுகல்ல தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இச் செய்தி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கி;ன்றன.
கொலை முயற்சி தொடர்பில் அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அச் செய்தியானது மிகப் பாரதூரமானதாகும் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.

அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை ஓய்வுபெற்ற உயர்ந்த இராணுவ அதிகாரி ஓய்வு பெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும் இந்த நடவடிக்கை அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹணுகல்ல தெரிவித்தார்.

No comments:

Post a Comment